India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2024-2025 ம் ஆண்டிற்கான 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது விபரங்களுக்கு WWW.tncu.gov.tn.in என்ற இணையதளத்தின் மூலமும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் என்ற முகவரியிலோ 04286-290908, 9080838008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-04-2025) வியாழக்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.89 ஆகவும், முட்டை கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.85 ஆகவும் நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையைப் பொறுத்தவரையில், ரூ.4.35-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைந்து ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக 22ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286 222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க <

திருச்செங்கோடு மலையடிவார பாதை வேலுசாமி மண்டபம் அருகே நேற்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோளின் விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள். @ FL 1/ FL2/FL3 FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம் நாமக்கல்லில் இன்று ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று 8ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (09-04-2025) புதன்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.89 ஆகவும், முட்டை கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.85 ஆகவும், முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நீடித்து வருகிறது. மேலும் கறிக்கோழி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.