Namakkal

News December 9, 2024

பளு தூக்கும் போட்டியில் கல்லூரி மாணவர் முதலிடம்

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி B.tech food technology துறையைச் சார்ந்த முதலாம் ஆண்டு மாணவர் தனுஷ் தென்னிந்திய பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு முதல் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News December 9, 2024

நாமக்கல்லில் விபத்து: ஒருவர் பலி

image

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் அண்ணமார்நகரை சேர்ந்தவர் பெரியசாமி (50), நேற்றிரவு பெரியாசமி புரோட்டா வாங்க தனது டூவீலரில் வீட்டிலிருந்து புறப்பட்டு மோர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பிள்ளாநத்தம் நாதன்காடு பகுதியில் வினோத்குமார் என்பவர் தனது உறவினர் ஒருவரை டூவீலரில் அழைத்து கொண்டு பருத்திப்பள்ளி நோக்கி வந்தபோது 2 டூவீலர்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News December 9, 2024

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கு மின்தடை

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (10-12-2024) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: சூரியம்பாளையம், தேவனாங்குறிச்சி, கிழேரிபட்டி, தொண்டிகரடு, முட்டன்செட்டி, செல்லிபாளையம், வரதராஜபுரம், முசல்நாயக்கன்பாளையம், கருந்தேவன்பாளையபம், மற்றும் சில பகுதிகள்.

News December 8, 2024

நாமக்கல்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வேத பிறவி (94981 67158), ராசிபுரம் சுகவானம் (94981 74815), திருச்செங்கோடு -முருகேசன் (94981 33890), வேலூர்- சரண்யா (87785 82088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 8, 2024

நாமக்கலில் முட்டை ஏற்றுமதி சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நவ.01இல் முட்டை கொள்முதல் விலையை 540 காசாக நிர்ணயம் செய்தது. தொடர்ந்து விலை படிப்படியாக உயர்ந்து டிச.03இல் 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், முட்டை ஏற்றுமதி தினமும் 40 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 50% குறைந்து, 20 லட்சமாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

News December 8, 2024

கல்லூரியில் பேச்சுப் போட்டி: ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு  பிறந்தநாளையொட்டி 17.12.2024 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News December 8, 2024

மண் பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு

image

திருச்செங்கோட்டில் வேளாண் துறையின் கீழ் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண், நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் வரும் 11ஆம் தேதி சேந்தமங்கலத்திலும், 18ஆம் தேதி எளச்சிபாளையத்திலும், 26ஆம் தேதி மல்லசமுத்திரத்திலும் நடைபெற உள்ளதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News December 8, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லட்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 7, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 7ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது.இதனால் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் ரூ.5.90 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News December 7, 2024

நாமக்கல்: 2 ஆயிரம் கோழிகள் தீயில் ஏரிந்து நாசம்

image

கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது தோட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று தான் வளர்க்கும் ஆடுகளுக்கு கூல் காய்ச்சி விட்டு அடுப்பை அணைக்காமல் வெளியே சென்றுள்ளார். அப்போது அடுப்பில் இருந்து தீ பரவி கொட்டகையில் தீ பிடித்து ஏரிந்ததில், சுமார் 2 ஆயிரம் கோழிகள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

error: Content is protected !!