Namakkal

News December 12, 2024

நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை படுஜோர்

image

நாளை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட, ஒரு முகம், 2 முகம், 3 முகம், பஞ்சமுகம், அச்சு விளக்குகள், பாவை விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண் விளக்கு, அச்சு விளக்கு, மாடல் விளக்கு, சுவாமி விளக்கு, கலர் விளக்கு உள்பட 40 வகையான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

News December 12, 2024

நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. முட்டை விலை 590 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News December 11, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.இடைநின்ற மாணவனை பள்ளியில் சேர்த்த துணை ஆய்வாளர்
2.எஸ் பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
3.செல்போன் கடையில் புகுந்த சாரைப்பாம்பு
4.நாமக்கல்: பெண்கள் மீதான வன்கொடுமை தடுக்க நடவடிக்கை
5.நாமக்கல்லில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

News December 11, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுப்பிரமணியன் (9498173585), திருச்செங்கோடு – செந்தில்வேல் பெருமாள் (9498174114), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 11, 2024

செல்போன் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

image

ராசிபுரம் கடைவீதி பகுதியில் வினோத் குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் இன்று 6 நீளம் சாரை பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்த போதும் மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் செல்போன் கடையில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் சார பாம்பை உயிருடன் பிடித்தனர்.

News December 11, 2024

பிரபல பேச்சாளர் நாமக்கல் வருகை

image

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வரும் 13-12-2024 அன்று, மாலை 6:30 மணி அளவில் பரமத்தி வேலூர் அண்ணா சிலை அருகில் நடைபெற உள்ளது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்க உள்ளார்.

News December 11, 2024

நாமக்கல்: பெண்கள் மீதான வன்கொடுமை தடுக்க நடவடிக்கை

image

நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுப்பதற்காக, அனைத்து நிறுவனங்களும் தனியாக குழு அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். 

News December 11, 2024

நாமக்கல்லில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (டிச.11) காய்கறி விலை நிலவரம்: கத்தரி ரூ.70, முருங்கை ரூ.150, வெண்டை ரூ.60, தேங்காய் ரூ.52, எலுமிச்சை ரூ.45, சின்னவெங்காயம் ரூ.50, பெரியவெங்காயம் ரூ.70, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.70, உருளை ரூ.50. இதனிடையே நேற்று 10ம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ35க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.7 விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News December 11, 2024

நாமக்கல்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் வேப்ப மரத்தில் இளைஞா் ஒருவா் கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதாக அப் பகுதியினர் ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த மாணவர், புதுச்சத்திரம் காரைக்குறிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஜீவரத்தினம் (17) என்பது தெரியவந்தது.

News December 10, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராஜன் (9498170004), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – கெங்காதரன் (9498136888) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!