India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான KRN. ராஜேஷ்குமார் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 4 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும், அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1. நாமக்கலில் ஒரு லட்சத்து எட்டு வடமாலை செய்யும் பணி துவக்கம்
2.நாமக்கல்: பணி நியமன ஆணை ஆட்சியர் வாழ்த்து
3.”டாப் 10″ இடத்தை பிடித்த மோகனூர் அரசுபள்ளி
4. நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
5.திருச்செங்கோட்டில் அருகே பெரும் விபத்து தவிர்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – செந்தில்குமார் (9498177818), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
மாநில அளவிலான ஏடிஎல் மாரத்தான் நடத்திய புதுமை படைப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான போட்டி நடைபெற்றது. புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் “டாப் 10” இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு அங்கிகாரம் கிடைக்கும்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிளை, நகரம் உள்ளிட்டவைகளுக்கு தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் மாநகர் தலைவராக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி முன்னாள் நகரத் தலைவர் சரவணன் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல்லில் இன்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான பி.தங்கமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜி.பி.ரமேஷ் நன்றியுரை கூறினார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கும் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பொது தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அனைவரும் தங்களது பள்ளிகளுக்கு சென்று ஹால் டிக்கெட் வாங்கி சிறப்பான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வே2நியூஸின் வாழ்த்துகள்.
திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. பல்வேறு பகுதியிலிருந்தும் தினந்தோறும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகைதந்த வண்ணம் உள்ள நிலையில், இன்று காலை மலைக்கோவிலுக்கு மலை சுற்றுச்சாலையில் காரில் ஒரு குடும்பத்தினர் வந்த போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சாலை ஓர பக்கவாட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Sorry, no posts matched your criteria.