India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் துறையூர், திருச்சி சாலை ஆகிய இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது அடுத்து திருச்சி சாலை பயணியர் மாளிகை அருகில் துறையூர் மற்றும் திருச்சி பேருந்துகள் பயணிகளை இறக்கி விடும்போது பயணிகள் சாலையை கடப்பதற்கு உரிய வகையில் வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து போலீசார் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 3ஆவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை , , ,மார்கழி மற்றும் தை மாதங்களுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வதற்கு விருப்பமுள்ள நபர்களுக்கு முன்பதிவு நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04286-233999 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று(11.11.24) திங்கட்கிழமை காலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வடை மாலைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயபெருமானை வழிபட்டுச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் வருகிற 16- ந் தேதி (சனிக்கிழமை), 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 23-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை பொது மக்கள் அளிக்கலாம்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து அமைக்கப்பட்டு இன்று 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. இதனால் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கடையில் வியாபாரம் குறைந்ததால் வருத்தமடைந்தனர்.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து அமைக்கப்பட்டு இன்று 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. இதனால் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கடையில் வியாபாரம் குறைந்ததால் வருத்தமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 1197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர், இதில் 580 தேர்வர்கள் போட்டித் தேர்வினை எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 1197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர், இதில் 580 தேர்வர்கள் போட்டித் தேர்வினை எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
Sorry, no posts matched your criteria.