Namakkal

News November 13, 2024

இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

image

நாமக்கல், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கு காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். கொல்லிமலை அறப்பளீஸ்வரர்கோயிலில், 3 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதன்கிழமை (13/11/24) காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் நடைபெறுகிறது. 

News November 13, 2024

குற்ற செயல்களை தடுக்க உடனே அழைக்கவும்

image

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் 136 பெண் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு “போலீஸ் அக்கா திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக 1091, 181 பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1098, 1930 சைபர் குற்றங்களுக்கான கட்டணமில்லா 24 மணி நேரமும் செயல்படுத்தப்படுகிறது.

News November 12, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤இரவு ரோந்து காவலர்களின் விவரம் ➤மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் ➤புதிய வழித்தடத்தில் பேருந்துகள் தொடக்கம் ➤திருச்செங்கோட்டில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம் ➤ராஜகோபுரம் கட்டும் பணி: முதல்வர் நாளை அடிக்கல் ➤கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 குறைந்தது ➤நாமக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்.

News November 12, 2024

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 12, 2024

ராஜகோபுரம் கட்டும் பணி: முதல்வா் நாளை அடிக்கல்

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், மூன்று நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை புதன்கிழமை (நவ.13) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

News November 12, 2024

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 குறைந்தது

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.89 ஆக சரிவடைந்துள்ளது. மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டு, கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

News November 12, 2024

நாமக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவம்பவர் 15ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தர்வகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை அழைக்கலாம்.

News November 12, 2024

ஹிந்தியில் ஆர்ப்பாட்டம் செய்த சிபிஎம்

image

அசாம் மாநில தொழிலாளர்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று ஆர்ப்பாட்டம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இன்று சிபிஎம் சார்பில் சின்ன எலச்சிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜீ தலைமையில் கவுன்சிலர் சுரேஷ், பெரியசாமி, சுந்தரம் ஒன்றிய குழு உறுப்பினர் கிட்டுசாமி பாலகிருஷ்ணன், ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 11, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤நாமக்கல் நகரில் எம்.பி திடீர் ஆய்வு ➤தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு ➤நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர் ➤ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு- முன்பதிவுக்கு அழைப்பு ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் ➤முட்டை விலையில் மாற்றமில்லை ➤குளிக்கச் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.

News November 11, 2024

நாமக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – ரெங்கசாமி (9487539119), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!