India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம், மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திரளணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஆண்களுக்கும் 5ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. மேலும், தகவல்களை agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தத் தடகள போட்டியின் ஒரு பகுதியான நடைபோட்டியில் 20 கி.மீ பிரிவில் கலந்து கொண்ட, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவன் சேர்ந்த எம். ஸ்ரீராம் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

நாமக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபடி:
✓ மதுரையில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தேபாரத் ரயில் 20671 (செவ்வாய்க்கிழமை தவிர) நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கு வந்து செல்லும்.
✓ பெங்களூரில் இருந்து மதுரை செல்லும் வந்தேபாரத் ரயில் 20672 (செவ்வாய்க்கிழமை தவிர)நாமக்கல்லில் மாலை 5.25 மணிக்கு வந்து செல்லும்.(SHARE)

நாமக்கல் மக்களே.., உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்னைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், ஸ்மார்ட் கார்டு சேவை சார்ந்த தகவல்கள், மாற்றங்கள் அப்டேட் ஆகாது இருப்பது போன்ற ரேஷன் கார்டு சர்ந்த எவ்வித சேவைகளுக்கும் உதவி செய்ய 04428592828-ஐ அழைக்கலாம்.(SHARE)

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (ஆகஸ்ட் 4) மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 441 பேர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளபோதிலும், கடந்த சில நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.4.55 ஆகவே நீடிப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 அன்று கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பொருட்கள், தள்ளுபடி மானியத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – பெருமாள் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமராபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .

குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 2 சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர், குழந்தையை இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதையடுத்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.4 ) மாவட்ட ரோந்து அதிகாரி – ஆகாஷ் ஜோஷி ( 9711043610), நாமக்கல் – வெங்கடாச்சலம் ( 9445492164 ), ராசிபுரம் – நடராஜன் ( 9442242611), திருச்செங்கோடு – மகாலக்ஷ்மி ( 7708049200), வேலூர் – ஷாஜஹான் (9498167357) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.