Namakkal

News November 15, 2024

நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 15 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவிலேயே நீடிக்கிறது.

News November 15, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கொட்டிய கனமழை
3. பரமத்தி வேலூரில் மின் தடை அறிவிப்பு
4. திருச்செங்கோட்டில் 9ஆவது மாபெரும் இரத்ததான முகாம்
5.ஆனங்கூர் பகுதியில் நாளை மின் தடை
6.சேந்தமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

News November 15, 2024

நாமக்கல்: நிறுவனங்களில் குழு அமைக்கப்பட வேண்டும்

image

நாமக்கலில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தி உள்ளார். அவரது செய்திக் குறிப்பில் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணிபுரிந்தால் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் (தடுப்பு, தடை, தீர்வு) 2013இன் கீழ் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார். 

News November 15, 2024

நாமக்கல்லில் கிராம சபை கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ.1இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் நவ.23ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு பொது பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், ஆனங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News November 15, 2024

நாமக்கல்லில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை நாமக்கல் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் மோகனூர் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. SHARE IT.

News November 14, 2024

நாமக்கலில் இன்று முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று 14 ந் தேதி நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News November 14, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
3.குமாரபாளையத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆட்சியர் ஆய்வு
4.இராசிபுரம் சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம்
5. 71-வது கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி கொடியேற்றிய மாநிலங்களவை எம்.பி
6. அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் போராட்டம்

News November 14, 2024

நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 14, 2024

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

image

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் இன்று 14 ந் தேதி குமாரபாளையம் வட்டம், காடச்சநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார் உடன் மாவட்ட ஆட்சியர் உமா நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

error: Content is protected !!