Namakkal

News November 22, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் 

image

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் (01.11.24) உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

நாமக்கல்லில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News November 21, 2024

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 21ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று 5 காசுகள் உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

News November 21, 2024

நாமக்கல்லில் கருப்பு பேட்ச் அணிந்த ஆசிரியர்கள் 

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் மட்டும் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் பெண் ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் சட்டை மற்றும் தங்களது உடையில் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்தனர்.

News November 21, 2024

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 22ஆம் தேதி வெள்ளிக் கிழமை, நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது. முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் விவசாயிகள்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

image

குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை கள பணியாளர்களில், நிரந்தர பணியாளர்கள் 86 பேர், தற்காலிக பணியாளர்கள் 100 பேர் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி நகராட்சி பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

News November 21, 2024

நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நாளை (22/11/2024) காலை 11 மணியளவில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் கூட்டரங்கில் மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்கள் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்கள் வாரிசுதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 28 ஆம் தேதி மதியம் 3.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் உமா கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 21, 2024

நாமக்கல் மக்களே விண்ணப்பிக்க அழைப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2024ம் ஆண்டுக்கான விருதுபெற விரும்புவோர் www.tn.gov.in/ta/forms/Department/ பதிவிறக்கம் செய்து முழு விவரங்களுடன் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ 23-11-2024க்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 20, 2024

நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை,குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும், தொடர்ந்து விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.40 என்ற அளவிலேயே நீடித்து வருகிறது.

error: Content is protected !!