India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி போர்காரணமாக, முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் 77 கன்டெய்னர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் முட்டை விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக சேர்மன் எஸ் பாலு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். இவரது மனுவை பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார் அண்ணா அறிவாலயத்தில் அளித்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாலு பெயர் திமுக வேட்பாளர் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல், வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்ற பொம்மம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட நான்கு மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர். துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 03 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <

நாமக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நாமக்கல் – 04286-233701
2. ராசிபுரம் – 04287-222840
3. திருச்செங்கோடு – 04288-252260
4. பரமத்திவேலூர் – 04268-221000
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
Sorry, no posts matched your criteria.