India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.126 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 4.60- ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.62 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது <
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள் நேற்று (01.03.2026) விருப்பமனு வழங்கினர். அதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் (94) – திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இன்று (2.3.26) மற்றும் (3.3.2026) ஆகிய நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லங்களுக்கே வந்து வழங்கப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பினை தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

lநாமக்கல் மாவட்டத்தில் நேற்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 01 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138),வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கார்த்திகேயன் – 9498168983) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.