India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகியின் நூற்றாண்டு விழா நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எருமப்பட்டி மேற்கு ஒன்றியம் அலங்காநத்தம் பிரிவில் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகி ஸ்ரீதேவிமோகன் தலைமையில், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கலில் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்து செல்ல வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாமக்கல் இராசிபுரம் நகராட்சி கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 24-25இன் கீழ் ரூ10.58 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், ராசிபுரம் நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.
திருச்செங்கோடு அருகே ஆத்தூராம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (29), நவ.22ம் தேதி இரவு சுரேந்தர் தனது டூவீலரில் திருச்செங்கோடு-வெப்படை ரோட்டில் கீழேரிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தி.கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாமக்கல் எம்பி ராஜேஷ்குமார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வரும் புதன்கிழமை (நவ.27) நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.73 ஆக சரிவடைந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி நேற்று அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.97 ஆக விற்பனையாகி வருகின்றது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்வடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களின் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 27.11.2024 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு குறைகள் ஏதாவது இருப்பின் அதனை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
2. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களில் தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
4.நாமக்கல்லில் இன்று முட்டை விலை உயர்வு
5.நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 23ஆம் தேதி நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.55 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இன்று 5 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ரூ5.55 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.