India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகினர் இன்று நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகிய நிலையில் இன்று திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பியுமான ராஜேஷ்குமார் முன்னிலையில் ஆதரவாளர்கள் 75 பேருடன் திமுகவில் இணைந்தார்.
நாமக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நாமக்கல் இராசிபுரம் திருசெங்கோடு பரமத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று, விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து பேசினர். மேலும் இதன் ஒரு பகுதியாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்த, விவசாயிகளுக்கு விருதுகளை இன்று வழங்கினார்.
நாமக்கல் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்: அரளி ரூ.300, வெள்ளை அரளி ரூ.300, மஞ்சள் அரளி ரூ.350, மல்லி ரூ.1200-900, செவ்வரளி ரூ.350, முல்லை ரூ.900, நந்தியாவட்டம் ரூ.60, சி.நந்தியாவட்டம் ரூ.300, காக்கட்டான் ரூ.280, சம்பங்கி ரூ.70, சாதா சம்பங்கி ரூ.120 ஆகிய விலைகளில் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் வாழும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள இலங்கைத்தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு கடன் உதவி வழங்க தகுதியான பயனாளிகளை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு மூலம் ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம்வரை கடன் வழங்க உள்ளது விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக 3ம் தளம், அகதியர் மறுவாழ்வு மையத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் வருகின்ற 2025 ஆண்டிற்கான முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் நாள் ஒன்றிற்கு 6 பங்குகள் கொண்ட அபிஷேகம் நடைபெறும் 1 பங்கு கட்டணம் ரூ 7000 ஆகும் முன்பதிவிற்கு 04286 – 233999 என்ற அலுவல எண்ணிற்கே மற்றும் நேரில் சென்ட தொடர்பு கொள்ளலாம்.
2024ஆம் ஆண்டுக்கான சமூக நீதி தந்தைப் பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் மற்றும் அதனால் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர எடுத்த நடவடிக்கை மற்றும் எய்திய சாதனைகள் குறித்த விவரங்களுடன், விண்ணப்பங்களை பெயர் முகவரியுடன் வரும் டிசம்பர் 20க்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
2.கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆட்சியர் ஆய்வு
3.நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம் -ரூ 5.65
4.நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
5.நாம் தமிழர் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகல்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
கூலிப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் தன் தாய் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு 1500 சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கி 80கிலோ எடை கொண்ட 3 அடி நிளமுள்ள மார்பிள் திருவுருவ சிலையை அமைத்து கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலை உலக பெற்றோர் தினம் அன்று தன்னை சிறுவயத்தில் கஷ்டப்பட்டு வளர்த்த தாயை வைத்தே திறந்து அவருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிகழ்வு சுற்றுபுற மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.