India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பங்கேற்றனர். குறிப்பாக மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9944229934, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கால்நடை, வேளாண்மை, நெடுஞ்சாலை, நகராட்சி குடிநீர் வழங்கல் உள்ளிட்ட 10 துறைகளில் வருகின்ற 8ந்தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட இருந்தனர் இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்கான ஆய்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம், காடம்பாடி, பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் இயங்கிவரும் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன், நேற்று ஆய்வு மேற்கொண்டதில் புகையிலை பொருட்கள் கடையில் இருந்ததால் கடைக்கு சீல் வைத்து ரூபாய் 25,000 அபராதம் விதித்தனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தக்காளியின் விலை உயர்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து மழை காரணமாக குறைந்துள்ளதுள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் நாகையில் ரூ.40-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு பயிற்சி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தனது செய்திகுறிப்பில் தெரிவித்தார். நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் ஒரு ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் சாலை ஓரங்களில் ஆற்றுக் கரை உடைப்புகளை சீரமைக்கவும் நெடுஞ்சாலை துறை சார்பில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மண்வெட்டி, மரம் அறுக்கும் கருவி, டிராக்டர்கள் பொக்ளின் இயந்திரங்களும் மீட்பு பணிகளுக்காக தயாராக உள்ளது என நெடுஞ்சாலைதுறை நாகை கோட்ட பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி சென்ற முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார், திருபூண்டி வளைவில் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மீது மோதாமல், ஓட்டுநர் காரை வளைத்தபோது, கார் பெரியாச்சி கோவில் சுற்றுச்சுவரில் மோதியது. சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் ஓஎஸ்.மணியன் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இல்லாமல் உயிர் தப்பினார். மேலும் கீழே விழுந்த அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விவசாயிகள் மாற்றுப் பயிராக பயறு வகை சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. ஜிப்சம் மற்றும் துத்தநாக சல்பேட்டுக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலோ முன்பதிவு செய்து பயன் பெற நாகை ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு பயிற்சி தொடங்கவுள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் நேர்காணல் நடத்தப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர oneyearcourse.editn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 6382436094 என்ற எண்ணை தொடப்புக்கொள்ள நாகை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.