India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகையில் இருந்து அக்கரை பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகிலிருந்து 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை மற்றும் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டி தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் ஒரு வருட இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் நவ.12 (நாளை) முதல் நவ.15 (வெள்ளிக்கிழமை) வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று (11.11.2024) மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், எஸ்பி அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா என்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக்குழு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13.11.2024 அன்று ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளது. தலைவர் காந்திராஜன் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், 18 உறுப்பினர்களை கொண்ட குழு வேளாண் மற்றும் உழவர் நலன் போன்ற 10 துறைகளை ஆய்வு செய்யவுள்ளது என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
நாகப்பட்டினம், வெளிப்பாளையம், பச்சை பிள்ளை குளம் பகுதியில் இயங்கிவரும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வெளிப்பாளையம் உதவி ஆய்வாளர் கோகுல்ராஜ் ஆய்வு இன்று மேற்கொண்டனர். அங்கு உள்ள கடையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பின்னர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அனந்தநல்லூரை சேர்ந்த சிவவேல் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது இந் நிலையில் சிவவேல் வீட்டில் நடந்த நிகழ்விற்கு பத்திரிகை வைக்கவில்லை என சாலையில் நின்று தகாத வார்தையால் திட்டியுள்ளார். வீண் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என சிவவேல் கேட்டுள்ளார்.இதில் இரு தரப்பிற்கும் மோதலில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது இதுதொடர்பாக 5பேரை திட்டச்சேரி போலீசார்கைது செய்துள்ளனர
நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் வேளாங்கண்ணிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. கடலிலும் குறைந்த அளவிலானோர் குளித்து மகிழும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வியாபாரிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.