Nagapattinam

News October 10, 2024

நாகை: வெளிநாடுகளுக்குச் செல்வோர் கவனத்திற்கு!

image

நாகை மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோர் வேலை வாய்ப்பு பயிற்சி துறை மூலமாக வேலை அளிப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோரை இணைக்கும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து நம்பத்தகுந்த இடங்களில் பணிபுரியலாம் என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

செருதூர் மீனவர்களிடம் கடல் கொள்ளையர்கள் கைவரிசை

image

நாகை, செருதூரை சேர்ந்த சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் விஜயன், ரமணன், விக்னேஷ்குமார், ரீகன் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 பைபர் படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 250 கிலோ மீன்பிடி வலை, செல்போன், ஜிபிஎஸ், 100 லிட்டர் டீசல் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்துச் சென்றுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 10, 2024

நாகையில் ரேஷன் கடையில் காலி பணியிடங்கள்

image

நாகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 19 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbngt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 9, 2024

நாகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

image

நாகையில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் 10 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். எனவே வேலை வாய்ப்பற்றோர் முகாமில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 8, 2024

நாகையில் கம்யூனிஸ்ட் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் இந்தியா கைகோர்ப்பதையும் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டு இயக்கம் சார்பில் இன்று நாகப்பட்டினம் அவுரி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர்

image

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் அக்டோபர் 19ந் தேதி நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலை வாய்ப்பற்றோர் பங்கேற்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News October 8, 2024

மத நல்லிணக்கத்தின் அடையாளம் நாகூர் தர்கா

image

நாகூரில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் தர்கா என்பது சூஃபி துறவி சையது அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது கல்லறையின் மீது கட்டப்பட்ட தர்கா ஆகும். ஷாகுல் ஹமீத் நாகூரில் பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. இதனால் 16-ஆம் நூற்றாண்டில் இந்து மக்கள் மற்றும் மன்னர்களின் பெரும் பங்களிப்புடன் நாகூரில் தர்கா கட்டப்பட்டது. இது அப்பகுதியில் இரு மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வின் அடையாளமாக விளங்குகிறது. SHARE NOW

News October 8, 2024

நாகை மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

பருவமழை – தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக நிலையில் நாகையில் அவ்வப்பொது மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் பருவ மழையின் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி எந்நேரமும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 04365-1077 மற்றும் 1800-233-4-233 ஆகிய தொலைபேசி இலவச எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

News October 8, 2024

வெடிப்பொருள் விற்பவர்கள் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக வெடிக்கடை அமைக்க விரும்புவோர் வெடிப்பொருள் சட்டம் 1884 மற்றும் வெடிப்பொருள்கள் விதி 2008ன் கீழ் வருகின்ற 19 ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!