Nagapattinam

News October 14, 2024

நாகை மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) கனமழை எச்சரிக்கையும், அக்.16-ஆம் தேதி அதி கனமழை எச்சரிக்கையும் (ரெட் அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

வேதாரண்யம் அருகே சிமெண்ட் மூட்டை விழுந்து ஒருவர் பலி

image

வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், நாலுவேதபதி சாஞ்சாடி தெருவை சேர்ந்தவர் குணச்செல்வன்(23). நேற்று நாலுவேதபதி சாஞ்சாடி தெருவைச் சேர்ந்த செல்வராஜ்(65)என்பவரின் புதிதாககட்டப்பட்ட வீட்டில் குணச்செல்வன் சுத்தம் செய்யும் போது பழைய கட்டிப்பிடித்த சிமெண்ட் மூட்டையை தோளில் தூக்கியபோது தலையில் விழுந்து முகம் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.

News October 14, 2024

நாகூரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

நாகூர் சில்லடி கடற்கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் நாகூர் போலீசார் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கடம்பங்குடியை நாவலன் (வயது 26) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார், அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

News October 13, 2024

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெயர் காரணம்

image

நாகை பண்டைய காலம்முதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை ‘நாகர்’ என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் ‘சோழகுல வல்லிபட்டினம்’ என்ற பெயரைப் பெற்றிருந்தது. பின்னர் காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது.

News October 13, 2024

பெண் கொலை வழக்கில் உறவினர் கைது

image

தேத்தாக்குடியை சேர்ந்த கலைமகள் கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அருகே குட்டையில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் கலைமகளின் உறவினரான சண்முகநாதன் 11 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளார். இந்த வழக்கில் புகார் கொடுத்த கலைமகளை பழிவாங்கும் நோக்கில் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

News October 13, 2024

நாகையில் 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்

image

நாகையில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக தகவல் வந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருந்து கொத்தள ரோட்டில் உள்ள ஒரு கடையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடையிலும் 13.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News October 12, 2024

திருமருகல் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

image

சீயாத்தமங்கையை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி மீனாம்பாள் (65). இவர் கடந்த 9-ம் தேதி காலை வீட்டிற்கு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ வாங்கிக் கொண்டு துண்டம்பாலூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையைக் கடக்க முயற்சித்த போது திருமருகல் நோக்கி சென்ற பைக் மோதி தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 12, 2024

நாகை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 11, 2024

வேதாரண்யம் அருகே மர்மமான முறையில் பெண் பலி

image

வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் கலைமகள் (43). தனது வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றார், நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியபோது குளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News October 10, 2024

திருப்பூண்டியில் ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்

image

திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் காரைநகர் புதுப்பாலம் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., இன்று(10.10.2024) ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உடன் இருந்தார்.

error: Content is protected !!