Nagapattinam

News October 18, 2024

கர்ப்பணிகளை பாதுகாக்கும் வம்சம் மையம்

image

நாகை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வம்சம் என்ற உதவி மையத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6 துரித நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

காரைக்கால் – மதுரை தடத்தில் ரயில் சேவை

image

நாகூரில் இருந்து மதுரை வழியாக இயங்கி வந்த கொல்லம் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து மதுரைக்கு தினசரி இயங்கும் வகையில் புதிய வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என நாகை ரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 18, 2024

நாகையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.19) நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபலாரும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

News October 17, 2024

தேவூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இளைஞர் கைது

image

இரட்டைமதகடியில் உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலின் படி கீழ்வேளூர் போலீசார் அந்த கடையில்‌‌ சோதனை செய்ததில் ரூ. 6ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கீழ்வேளூர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேவூர்- இருக்கை சாலையை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

News October 17, 2024

நாகையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆட்சியர்

image

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 19.10.2024 அன்று நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் அலுவலகத்தில், நாகை ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று வழங்கினார். அவருடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திக்கேயன் உடனிருந்தார்.

News October 17, 2024

நாகையில் மனநலம் பாதிக்கபட்ட 24 பேர் மீட்பு

image

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் இதுவரை மாவட்டத்தில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருவாரூர் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனநலம் தேறியவர்கள் அவர்களது உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

News October 17, 2024

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் அக்.19-ஆம் தேதி காலை 9 முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளா்கள் தோ்வு செய்ய உள்ளனா். ஷேர் செய்யவும்

News October 16, 2024

நாகை மக்களின் கவனத்திற்கு

image

நாகப்பட்டினம் மாவட்டம் பொதுமக்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் வெளியிடபட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் விவரம். பா.சரவண பாபு மாவட்ட அலுவலர், செல் 9445086428 மின்னஞ்சல்: distfirenagai@gmail.com மற்றும் சீனிவாசன், மாவட்ட துணை அலுவலர் 9445086429 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம். ஷேர் செய்யவும்

News October 16, 2024

பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை

image

வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் வசிக்கும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து முகாம்களில் தங்க வைக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்

News October 16, 2024

உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

image

உயர் கல்விக்கு வழிகாட்டும் பாதைகள் ஆயிரம் என்ற நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி ஈசனூர் ஆரிபா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கண்ட நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!