India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் நாளைநடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாகை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 880 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்காக தமிழ்நாடு -இலங்கையை நோக்கி அடுத்த இரு நாட்களில் நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகை உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 880 கி.மீ. தொலைவில் நிலைக் கொண்டுள்ளதாகவும், இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குறும்பேறியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் கணேசன் (15). இவர் திருமருகல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்து தனது உறவினரான மதன்ராஜ், வீரமணி ஆகிய மூவரும் இருச்சக்கர வாகனத்தில் திருமருகலில் இருந்து குறும்பேறி நோக்கி சென்ற போது திருச்செங்காட்டங்குடியில் நிலை தடுமாறி பனை மரத்தில் மோதியது. சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார்.
நாகையில் திமுக மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, இல்ல இல்லத் இணைய உள்ள இணையர் இருவரும் கழகமும் கலைஞரும் போல் கழக தலைவரும் உழைப்பும் போல் பல்லாண்டு வாழ்க என பஞ்ச் வைத்து பேசினார்.
நாகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு எஸ்பி அருண்கபிலன் தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 60 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை முதல்வர் இரவு ஓய்வு எடுக்கும் வேளாங்கண்ணி தனியார் விடுதி, வரவேற்பு பகுதியான புத்தூர் ரவுண்டானா, திருமண விழா நடைபெறும் இடம் ஆகியவற்றில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் அரசு உயர்நிலை பள்ளி சமூகவியல் ஆசிரியர் வீரமணி (50). இவர் அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ள நேற்று (நவ.23) நாகை மாவட்டம் வந்திருந்தார். அதைதொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயம் சென்று மாதாவை வழிபட்டார் அவர், நேற்றிரவு நாகூர் ஆண்டவர் தர்கா சென்று வழிபாடு செய்தார். அப்போது தர்கா நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா அருகில் கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே மேம்பாலம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனை சீரமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன் விடுத்த கோரிக்கை நேற்று Way2News-இல் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று (நவ.23) நெடுஞ்சாலை துறையினர் குண்டும் குழியுமான சாலையில் மணல் கொட்டி தற்காலிகமாக சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.