India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்ட பா.ஜ.க தலைவர் மறைந்த கார்த்திகேயனின் படத்திறப்பு விழா நாளை 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு நாகை விபின் ரெசி டென்சில் நடைபெறவுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று படத்தை திறந்து வைத்து பேசுகிறார். இதில் எச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பனைமேட்டை சேர்ந்தவர் பக்கிரிசாமி (53). விவசாய தொழிலாளி வேலைக்கு சென்று விட்டு நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பனைமேடு வெற்றிலைபட்டி குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த பக்கிரிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இப்போது வழியிலேயே உயிரிழந்தார்.
நாகை மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்ய முதல்வர் மருந்தகம் அமைக்க டிசம்பர் 10 ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் <
திருக்குவளை தாசில்தாராக கிரிஜா தேவி, வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலரின் பி.ஏ. ஆக சுதர்சன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக ஜெயசீலன், அரசு கேபிள் டி.வி தாசில்தாராக ஸ்ரீதேவி, கீழ்வேளூர் வட்ட அலுவலக தனி தாசில்தாராக ராஜசேகரன், கீழ்வேளூர் தாசில்தாராக கவிதாஸ், வேதாரண்யம் தாசில்தாராக சக்கரவர்த்தி, சி.பி.சி.எல் தாசில்தாராக ராஜ்குமார் ஆகியோரை ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு/குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்தில் நீர் பாசன கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் விவசாயிகள் பயன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் நேற்று தெரிவித்துள்ளார்.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25இன் கீழ் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மாற்று பயிராக பயறு வகை, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. எனவே பயன்பெற விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்டக் கல்வி தன்முனைப்பு திட்டம் (DEEP) வழியாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று பார்வையிட்டார்.
2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற 12 ந்தேதி வியாழக்கிழமை நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் விதமாக 21-12-2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.