India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் ‘கலைஞா் கைவினைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற வங்கிக் கடனுதவி மற்றும் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு உட்பட்ட கைவினை கலைஞராக இருத்தல் வேண்டும். மேலும் தகவலுக்கு 89255-33970 என்ற எண்ணை தொடரபு கொள்ளலாம்..
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல் 23ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட கூடிய மாவட்டங்களில் நாகை 4-ஆம் இடத்தில் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள், குறையும் நிலத்தடி நீர் மட்டம் ஆகிய காரணங்களால் வரும்காலங்களில் நாகை மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி, கடும் வெப்பம், அரிசி உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கான நில ஆவணங்கள், கடவு சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களில் உள்ள கடன் வழங்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீக்கி ஒப்படைக்க உள்ளதால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளர் பிரிவை அணுகிட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024-2025ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பவர்டில்லர் மற்றும் விசை களை எடுக்கும் கருவி (பவர் வீடா) நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சுமார் 6 லட்சம் ஹெக்டர் பரப்பளவு நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நிவாரணம் குறித்து ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த வரும் அடுத்த மாதம் ஜன.15-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பகுதி வயல்கள் எப்படி உள்ளது? கமெண்டில் தெரிவிக்கவும்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் வருகின்ற டிச.26-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் மின்சார மோட்டார்களை கைப்பேசியால் இயக்கும் கட்டுப்பாட்டு கருவி மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் கவியரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பழைய மின் மோட்டாரை மாற்றி அதிக திறன் கொண்ட புதிய மின் மோட்டார் பொருத்தி கொள்ள 50% மானியம் அல்லது ரூ.15000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, நாகப்பட்டினம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.