Nagapattinam

News December 25, 2024

கீழ்வெண்மணி படுகொலை தினம் இன்று

image

1968-ம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ‘அரை படி’ நெல்லை கூலி உயர்வாக கேட்டதால், கோபாலகிருஷ்ண நாயுடு என்பவரால் 44 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அணையா நெருப்பாகவே இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் இன்றுடன் 56 ஆண்டுகளை கடந்துவிட்டன. இருப்பினும், அதன் அனலும் சாம்பலும் மனித குலத்தை நேசிக்கும் ஒவ்வொரு நெஞ்சிலும் தனலாய் தகிக்கவே செய்கிறது.

News December 24, 2024

தந்தை பெரியார் சிலைக்கு நாகையில் மரியாதை

image

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி மற்றும் புத்தூரில் திராவிடர் கழக மாவட்டததலைவர் நெப்போலியன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

News December 24, 2024

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஒன்றிய தலைவர் சகிலா தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சத்துணவு பணிக்காக புதிதாக நியமனம் செய்ய பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் தேர்வு செய்வதுடன் தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர், ஜமுனா மாவட்ட செயலாளர் அருளேந்திரன் பொருளாளர் பாலாம்பாள் பங்கேற்றனர்.

News December 23, 2024

திருவள்ளுவர் சிலை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா

image

நாகை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவப்பட்ட 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ,கீழ்வேளூர் எம்எல்ஏ மாலி உள்ளிட்டோர் இருந்தனர்.

News December 23, 2024

வலையில் சிக்கிய ஆஸ்திரேலியா ஆந்தை

image

நாகப்பட்டினம் காவலர் குடியிருப்பில் ஆஸ்திரேலிய வகை ஆந்தை ஒன்று வலையில் சிக்கிக் கொண்டு நீண்ட நேரமாக போராடி கொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த நாகை தீயணைப்பு துறை வீரர்கள் ஆந்தையை பத்திரமாக மீட்டனர். பின்பு சோர்வாக காணப்பட்ட ஆந்தைக்கு முதலுதவி செய்து பின்பு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆஸ்திரேலிய அரிய வகை ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

News December 23, 2024

301 மனுக்களுக்கு நடவடிக்கை ஆட்சியர் உத்தரவு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொது மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 301 மனுக்களை பெற்ற ஆட்சியர் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

News December 23, 2024

நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலை உருவாக்கி உள்ளதை குறிக்கும் வகையில் இந்தப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2024

  இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்

image

கோடியக்கரையில் இருந்து பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் ஆலிவர் அட்லி ஆமை இறந்து கரை ஒதுங்குகின்றன. ஆமைகளானது கடல் பிறப்பிலிருந்து நிலப்பரப்பிற்கு முட்டையிடும் வரும் வேளையில் படகுகளின் சிக்கி இறப்பதாகவும் கூறுகின்றனர். கடற்கரை ஓரங்களில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து ஒதுங்கிக் கிடக்கின்றன.

News December 22, 2024

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஏராளமான இளைஞர்கள், பல அருட்தந்தையர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடி கொண்டாடினர்.

News December 22, 2024

வேதாரண்யத்தில் சிக்கிய திருட்டு கும்பல்

image

வேதாரண்யம் பகுதியில் ஆடு திருட்டு அதிகளவில் நடைபெற்று வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் எக்கல் பகுதியில் 3 நபர் ஒரே பைக்கில் 2 ஆடுகளை திருடி கொண்டு வந்தபோது, வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளிக்கிடங்கு பகுதியில் பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர். உடனடியாக வாய்மேடு காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!