India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று ஜனவரி 14, நாகை பெரிய கடை தெருவில் விற்பனை செய்யப்பட்ட பூக்கள் இன்றைய விலை முல்லை ரூ.2100, சந்தன முல்லை ரூ.1000, காக்கரட்டான் ரூ.1000, நந்தியாவட்டை ரூ.300, அரளி ரூ.400, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.160, ஆப்பிள் பட்டன் ரோஸ் ரூ.170, பன்னீர் ரோஸ் ரூ.170, மற்றும் செண்டுமல்லி ரூ.80 என்ற விலையில் விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பூக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் இன்று திமுக சார்பில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக்கில் நாகப்பட்டினம் நகரை சுற்றி வந்தார். அப்போது அவரது பைக்கில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான மாரிமுத்து பின்னால் அமர்ந்து பயணித்தார். பேரணியில் HR & C மாவட்ட அறங்காவல் குழு தலைவர் நாகரத்தினம் உள்ளிட்டோர் சென்றனர்.
நாகையில் இன்று பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் திருவுருவ நாள்காட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து வழங்கினார். மாவட்ட , நகர , வார்டு கழக நிர்வாகிகள் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்கள்.
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான ஆளுர் ஷாநவாஸ் அவர்களுக்கு நாகை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி செயலாளர் ஜெயஸ்ரீ மகேந்திரன் சால்வை அணிவித்தும் சந்தன மாலை அணிவித்தும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 54 மனுக்களை பெற்ற அவர் உடனடி நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திறன்பேசி கருவியை வழங்கினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேருராட்சி மற்றும் கீழ்வேளூர் முதல் நிலை பேரூராட்சி மற்றும் ஒக்கூர் ஊராட்சி ஆகியவற்றில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்.
வேளாங்கண்ணிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்து செல்வதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ரூ.9 கோடியே 48 லட்சம் மதிப்பில் வாகனங்கள் எளிதில் நகர பகுதிக்கு வந்து செல்லும் வகையில் மாற்று பாதை அமைக்க அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சு போட்டிகள் வரும் 21, 22 தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் மூலம் வருகின்ற 20ஆம் தேதிக்குள் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்திட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சு போட்டிகள் வரும் 21, 22 தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் மூலம் வருகின்ற 20ஆம் தேதிக்குள் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்திட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய் கிழமையில் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் 14ந்தேதி செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.