India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரிய உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில் தனி தாசில்தார் அமுதா, கோவில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதீஷ், நில அளவையர்கள், கோவில் பணியாளர்கள் ரூ.3 கோடி மதிப்பிலான கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என பதாகை வைக்கப்பட்டது.
49.93 லட்சம் பிறப்புக்கு முந்தைய பதிவுகளை பகுப்பாய்வு செய்யும் தமிழக ஆய்வுக்கு பின் பொது சுகாதார மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2019 முதல் 2024 வரை 15 முதல் 17 வயதுடைய டீன் ஏஜ் பெண்கள் அதிகளவு கருத்தரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில் நாகபட்டினம் மாவட்டம் 3.3 சதவிகிததுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள இளைஞர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் உதவித் தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலகத்திலும் விண்ணப்பத்தினை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள இ-சேவை மையத்தில் சட்ட விரோதமாக போலி ரேஷன், ஆதார் அட்டை தயாரித்த அகஸ்தியன் பள்ளியைச் சேர்ந்த ரஞ்சிதம் (43), சித்ரா (31) ஆகிய 2 பெண்களை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கணினி, பிரிண்டர், லேமினேஷன் எந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் சம்பந்தப்பட்ட ஆதம் ஆரிப் முத்தலிப் என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 2025 – 26 ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற்கல்வி பள்ளி துவங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் இது குறித்த விவரங்களுக்கு 04365 – 250126 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் 1-1-2025 முதல் 31- 03 – 2025 வரையிலான காலாண்டிற்கு நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவினர் மற்றும் ஒராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது , இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் தமிழ் செல்வன், அரசிற்கு பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று (ஜன.19) மதியம் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, நாகை மாவட்டத்தை பொறுத்தவரை 357 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 85 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நாகூர் – நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நாகை ஆதர்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை 18ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் கண் அனைத்து சம்பந்தமான நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.