Nagapattinam

News January 28, 2025

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் 3-ஆம் கட்டமாக 30 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

News January 28, 2025

 மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்

image

வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் பாலா என்கிற வீரபாலன் (23). சாலை விபத்தில் இவர் உயிரிழந்த நிலையில் இவரது உடலை தானம் செய்ய அவரது தாய் முன் வந்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் விதமாக இறுதி சடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்.எல்.ஏ வி.பி.நாகை மாலி, கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.

News January 27, 2025

மூளை சாவு அடைந்தவருக்கு எம்.எல்.ஏ மரியாதை

image

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் வீரபாலன் விபத்தினால் மூளை சாவு அடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் வழங்கினர். இதனை ஆறு நபர்களுக்கு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சி.பி.எம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிபாசு உடன் இருந்தனர்.

News January 27, 2025

திருமருகல் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

image

நாகை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கப்படுகிறது. இதில் வருகின்ற 30ந்தேதி திருமருகல் ஒன்றியத்தில் ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி, மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் நடக்கிறது. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

நாகை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை கூட்டரங்கில் 14.02.2025 அன்று காலை 10:30 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. திருச்சி கருவூல கணக்குத்துறை இணை இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். ஓய்வூதியர்கள் தங்கள் குறை தொடர்பான மனுக்களை 31.01.25க்குள் அனுப்பி வைக்குமாறு நாகை மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 27, 2025

கீழ்வேளூர்: மூடப்பட்ட ரயில்வே கேட்

image

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் 27/01/2025 திங்கட்கிழமை இன்றும் 28/01/2025 நாளை செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மூடப்பட்டுள்ளது. மக்கள் மாற்று பாதையில் செல்லுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

News January 27, 2025

நாகை: 104 நிறுவனங்கள் மீது வழக்கு

image

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 60 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் நிறுவனம் என மொத்தம் 104 நிறுவனங்கள் மீது அதிரடியாக வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News January 26, 2025

சமாதான புறாவை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்

image

நாகப்பட்டினம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சமாதான புறாவினை பறக்கவிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன், இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி ஆகியோர் உள்ளனர்.

News January 26, 2025

ரயிலில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

image

காரைக்காலில் இருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயிலில் ரயில்வே துணை போலிஸ் சூப்ரண்ட் சக்கரவர்த்தி மற்றும் போலிசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த குணா என்பவர் ரூ.5,000 மதிப்புள்ள புதுவை மாநில மதுபாட்டில்களை கடத்தி செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 25, 2025

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய விமானப்படைக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. 01.01.2005-க்கு பிறகு 01.07.2008 முன்னதாக பிறந்துள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் LINK இந்த இணையதளம் மூலம் 27.01.2025-க்குள் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொலைபேசியில் (எண்.04365-299765) தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!