Nagapattinam

News January 31, 2025

கஞ்சா விற்பனை குறித்து தெரிவிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் உங்கள் எஸ்.பியிடம் பேசுங்கள். 8428103090 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

நாகை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஊழியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் நடக்கிறது. இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 31, 2025

கோழிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கோழி காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வருகின்ற பிப்ரவரி 1 முதல் 14 வரை நடைபெற உள்ளது. எனவே கோழி வளர்ப்போர் மற்றும் பண்ணை வைத்திருப்போர் இந்த முகாம்களில் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

நாகையில் இன்றைய பூக்களின் விலை நிலவரம்

image

நாகை பெரிய கடை தெருவில் இன்று (ஜனவரி 31) விற்பனை செய்யப்பட்ட பூக்கள் மற்றும் அவைகளின் விலைகள்: செண்டுமல்லி ரூ.120, ஆப்பிள் பட்டன் ரோஸ் ரூ.220, பன்னீர் ரோஸ் ரூ.210, செவ்வந்தி ரூ.240, அரளி ரூ.300, சம்பங்கி ரூ.230, நந்தியாவட்டை ரூ.600, காக்கரட்டான் ரூ.900, சந்தன முல்லை ரூ.1200, முல்லை ரூ.1400 என்ற விலையில் விற்கப்பட்டது.

News January 30, 2025

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி

image

நாகப்பட்டினம் வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் நடத்தும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சிக்கான LED ஒளி விளக்குடன் கூடிய 10,800 நொடிகள் இடைநில்லா சிலம்பம் சுற்றி சிலம்ப மாணவர்கள் சாதனை படைக்க உள்ளனர். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பா கோவிலில் நடைபெறவுள்ளது.

News January 30, 2025

நாகை: மீன்பிடி வலையில் சிக்கிய அரியவகை ஆமை

image

வேதாரண்யம் அருகே மணவாக்கால் பகுதி கடற்கரைக்கு முட்டையிட வந்த 40 கிலோ எடை கொண்ட ‘ஆலிவ் ரிட்லி’ என்ற அரியவகை ஆமை ஒன்று நேற்று (ஜன.29) கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் சிக்கியது. இதனை அடுத்து வலையில் சிக்கி தவித்த அந்த ஆமையை கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர், அதனை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

News January 30, 2025

நாகை: 238 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல்

image

கீழ்வேளூர் போலீசார் ஆழியூர் பிரிவு சாலை மற்றும் ஓர்குடி பாலம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இருவேறு நபர்களிடம் இருந்து இருந்து 118 லிட்டர் மற்றும் 120 லிட்டர் என மொத்தமாக 238 லிட்டர் கடத்தல் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (43) என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

News January 29, 2025

நாகப்பட்டினம் த.வெ.க செயலாளருக்கு வாழ்த்து

image

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் நாகப்பட்டினம் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக மா.சுகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து அவருக்கு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். 

News January 29, 2025

வேளாங்கண்ணியில் புதிய கட்டிடத்தை திறந்த முதல்வர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி சிவன்கோவில் அருகில் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 29, 2025

உளுந்து, பயறு வகைகளை காப்பீடு செய்ய கடைசி நாள் அறிவிப்பு

image

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பயறு வகைகளை பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிரை பயிர் காப்பீடு செய்யலாம். இந்த பயிர் காப்பீடு செய்வதற்கு பீரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.89 ஆகும். அதன்படி நாகை மாவட்டத்தில் உளுந்து, பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு பிப்.17-ஆம் தேதியே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!