Nagapattinam

News April 6, 2024

வேட்டைக்காரன்இருப்பு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

image

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி அடுத்த வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 5, 2024

நாகை: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

image

நாகை மாவட்டம் நகராட்சி பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடி மையத்தினை இன்று, பொது தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக் ஐஏஎஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அரங்கநாதன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News April 5, 2024

நாகையில் நாளை ஒரே இடத்தில் வேட்பாளர்கள்

image

நாகை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இணையும் கலந்தாய்வு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நாகை மேலக்கோட்டை வாசல் வி.பி.என் மகாலில் நடக்கிறது.
எனவே வணிகர்கள், சேவை சங்கத்தினர், பொதுமக்கள் என நாகை மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

பாதி வழியில் பழுதான தனியார் பேருந்து

image

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு சுமார் 50 பேர் ஒரு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் வந்துள்ளனர். வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் நாகை அருகே உள்ள கருவேலங்கடை பகுதியில் திடீரென பாதி வழியிலேயே பேருந்து பழுதானது‌. இதனால் அதில் பயணித்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

News April 5, 2024

குண்டர் சட்டத்தில் பெண் கைது 

image

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரி என்ற நபர் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை இன்று கள்ள சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவினால், குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

News April 5, 2024

நாகை: குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை

image

நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை கிடந்துள்ளது. இதைகண்ட பேராலய பணியாளர்கள் இது குறித்து வேளாங்கண்ணி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒரிசா போலீசார் குவிப்பு

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரிசா மாநிலத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நாகையில் முகாமிட்டுள்ளனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்று உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

News April 4, 2024

வேளாங்கண்ணியில் திமுக செயல்வீரர் கூட்டம்

image

வேளாங்கண்ணியில் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பேரூர் பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் வாங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!