India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்வதாக, தொடர்ந்து நாகை ரயில்வே காவல் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கரைபேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன்(36) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துனர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் நாகூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருந்துகளின் இருப்பு, விற்பனை நிலவரம், மக்களின் ஆர்வம் குறித்து கேட்டறிந்தார்.
மழையால் திருமருகல், திட்டச்சேரி, குத்தாலம், கீழப்பூதனூர், மேலப்பூதனூர், திருக்கண்ணபுரம், பில்லாளி, கோட்டூர், ஆலத்தூர், ஏா்வாடி, அம்பல், பொறக்குடி, வாழ்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பச்சைப் பயிறு, பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் அதிகாரிகள் பயிர்களின் சேதத்தை ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறைகளை வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் விரைவில் ஆலோசிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது எனவும் ஆலோசனைகள், கருத்துக்களையும் 30.04.2025 க்குள் தெரிவிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It
நாகையில் 6.11 .2020 முதல் 24.4.2022 வரை இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் பெரியசாமி. அப்போது நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக பெரியசாமி இருந்துள்ளார். இதுகுறித்த புகாரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு பெரியசாமி அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாகை ADM மகளிர் கல்லூரியில் வருகின்ற 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலையில் இருந்து நாகை , வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், திருக்குவளை , எட்டுக்குடி , காமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தும், மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.