Nagapattinam

News March 29, 2025

மங்கு, பொங்கு, மரண சனியில் இருந்து விடுபட ?

image

சூரியனார்கோயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். இங்கு சிரசில் சிவலிங்கத்துடன் குழந்தை வடிவில் சனிபகவான் பாலசனியாக அருள்பாலிக்கிறார்.இந்த மண்ணை மிதித்தவரை எமதர்மன் நெருங்க கூடாது என சிவபெருமான் கட்டளையிட்டதாக ஐதீகம். எம பயம் நீக்கும் பால சனிபகவானை வணங்க மங்கு, பொங்கு, மரண சனி ஆகிய மூன்றின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. உடனே Share பண்ணுங்க..

News March 29, 2025

நாகை: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 29, 2025

193 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பார்வையிட்ட ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுகிறது. மாணவ,மாணவிகள் தேர்வுகள் எழுதுவதை வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்  ப.ஆகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.

News March 28, 2025

10ம் வகுப்பு தேர்வினை ஆட்சியர் ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 42 மையங்களில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. இதில் 138 பள்ளிகளை சேர்ந்த 4425 மாணவர்கள் 4219 மாணவிகள் என மொத்தம் 8444 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இன்று நாகை நடராஜன் தமயந்தி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

News March 28, 2025

193 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

News March 27, 2025

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற அடுக்க அடையாள எண் அவசியம்

image

நாகை மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண்ணை பெறாத விவசாயிகள் மார்ச் 30ஆம் தேதி அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க பெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 27, 2025

கால்நடை பண்ணை அமைக்க மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில் நாட்டுக்கோழி, செம்மறி ஆடு, வெள்ளாட்டு பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் https://nim. udyamimitra.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

error: Content is protected !!