India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் கண்மாய் போன்றவற்றில் விவசாயிகள் இலவசமாக மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மண்பாண்ட தொழில் மற்றும் பொதுபயன்பாட்டிற்கு தேவைப்படுவோர் உரிய கிராம கணக்கு விண்ணப்பத்துடன் thesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் இன்று அறிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று (ஜூலை 5) நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட பயிற்சி முகாமில் தேசிய அளவில் கூடை பந்தாட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற யாசினி என்ற மாணவிக்கு விளையாட்டு தூதர் பட்டத்தை ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அழைப்பு விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் சலுகைகளை பெற்று தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோர்களும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 08.07.2024 முதல் தினசரி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளதால் இப்பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை நாளாக ஜூலை 11ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி, தாய்மார்கள் குழு கூட்டம், பள்ளிகளில் பேச்சு போட்டி, அலங்கார ஊர்தி மூலம் விழிப்புணர்வு, மரம் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஷ் இன்று தெரிவித்துள்ளார்.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை தொடங்கிட வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து நாகை எம்பி வை.செல்வராஜ் கோரிக்கை மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்
சென்னை மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதால், நாகை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்ட ஆவணங்கள், நினைவு சின்னம், செய்திதாள்கள், அஞ்சல் உறைகள், ரூபாய் தாள், நாணயங்கள் உள்ளிட்டவைகளை நாகை அருங்காட்சியகத்தில் தர வேண்டுமென ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 – 25ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள், நேரடியாக கல்லுரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 04365-250129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
நாகை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பரிசு தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.