India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.. 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.
நாகை மாவட்டம், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த தங்குமிடம், உணவகம், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 வகையான விருதுகள் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. எனவே, தகுதி உடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா துறை சம்பந்தமான தொழில்முனைவோர், சுற்றுலா விருது பெற 26-8-2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, இலங்கையை சார்ந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, மீனவர்கள் படகின் மீது ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், மீனவர்கள் படகில் இருந்த ஜிபிஎஸ், மீன்கள் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம், முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. மேலும், விளையாட்டு போட்டிகளில் 12 முதல் 25 வயது வரை உள்ளவர் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்ள sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 25-ந் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என நாகை கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் பாலமுரளி தலைமையில் நாகை டாடா நகர் சமுதாயக்கூடம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னால் மீனவர் அணி செயலாளர் செல்வம் நாட்டார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை புழலில் உள்ள மத்திய சிறைச்சாலையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கே.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையிலான பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ், காஞ்சிபுரம் எம்எல்ஏ உறுப்பினர் எழிலரசன், பெரம்பூர் எம்எல்ஏ சேகர் , போரூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3-வது புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் 16.08.2024 முதல் 26.08.2024 வரை நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது , அனுமதி இலவசம், மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
நாகை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரன் ஆய்வு செய்தார். தெற்கு பொய்கைநல்லூர் புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின் பொய்கைநல்லூர் ஊராட்சி வடக்கு தெருவில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் முருகன் என்கிற பாலசுந்தரம் உள்ளிட்ட 9 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் விசைப்படகில் இருந்து நிலை தடுமாறி முருகன் இன்று அதிகாலை கடலில் விழுந்தார். இதனை அடுத்து அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.