India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவிலின் உப கோவிலான பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி ஆகும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் ஒழிப்பது தொடர்பான வாராந்திர ஆய்வு கூட்டம் நேற்றிரவு நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் வருவாய் துறை மற்றும் கலால் துறை அலுவலர்கள் பங்கேற்று கள்ளச்சாராயம் ஒழிப்பது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ரஞ்சித் சிங் பணியாற்றி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு அவரை சேலம் மாநகராட்சின் ஆணையராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பிரபல யூடியூபர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் வருகை தந்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டும் செல்பி எடுத்து கொண்டனர்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 333 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு மேற்கு பகுதியில் வசிப்பவர் சமூக ஆர்வலர் செந்தில். இவரது வீட்டு தோட்டத்தில் இன்று காலை அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை வந்துள்ளது. இதனை கண்ட செந்தில் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வந்த வன அலுவலர் பாண்டியனிடம் ஆஸ்திரேலிய ஆந்தையை செந்தில் ஒப்படைத்துள்ளார்.
நாகை மீனவர்கள் 10 பேரின் நீதிமன்றக் காவலை 3ஆவது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும், இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவல் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாகை ஆட்சியராக இருந்த ஜானிடாம்வர்கீஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஆகாஷ் புதிய மாவட்ட ஆட்சியராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அனைத்துத்துறை அதிகாரிகளும் பொறுப்புணர்வோடு மக்களுக்காக செயல்பட வேண்டும் என்றும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் புதிய ஆட்சியர் கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக பி.ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பணி மாறுதல் ஆகி சென்ற நிலையில் இன்று புதிய மாவட்ட ஆட்சியராக பி.ஆகாஷ் பதவியேற்க உள்ளார். இன்று ஆட்சியர் அலுவலகத்தில் 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.