India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோட்டக்கலையில் உற்பத்தி செய்த கன்றுகளையும் மா கன்றுகளை விட்டு செய்தல் பணியினையும் ஆய்வு செய்தார். அப்பொழுது தோட்டக்கலை அலுவலர் வைரவமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்விகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உடன் இருந்தனர்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் முகமது ஷா நவாஸ் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நாகப்பட்டினம் தொகுதியில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த விபரப் பட்டியலை வழங்கி, பணிகள் விரைவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (ஜூலை.26) தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மானியத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் ஜியோ உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நாகை நகர்மன்ற உறுப்பினர் மாரிமுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருக்குவளை அருகே கஜா புயலின்போது சேதம் அடைந்த எட்டிக்குடி, சக்திமங்கலம் வழியாக சித்தாய்மூர் செல்லும் சாலை உருகுலைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எட்டுக்குடியில் இருந்து சக்திமங்கலம், பெருமாள் திடல், கீரம்பேர், தொழுதூர், ஆலத்தம்பாடி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லக்கூடிய முக்கிய சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை தமிழக சட்ட துறை அமைச்சர் ரகுபதி இன்று மதியம் 3 மணியளவில் வழங்குகிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு நாகை புதிய பேருந்து நிலையத்தில் 5 புதிய பேருந்துகளை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
நாகை அபிராமி சன்னதி திடலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜ் புகைப்படம் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பதாகை காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது. நாகை காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் மாவட்ட தலைவரின் புகைப்படம் இல்லாமல் அக்கட்சியினர் சிலர் பதாகை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை.26-இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மானியத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் ஜியோ உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேதாரணியம் வட்டம் அவரிக்காடு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிவரும் காலனி தெருவைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவரின் மகள் திருமணத்திற்கு தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்திலிருந்து திருமண உதவித்தொகை ரூ.5000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று (ஜூலை.23) வழங்கினார்.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து நாகை அபிராமி சன்னதி திடலில் இன்று மாலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால், ஜீவானந்தம், நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.