India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று(ஜூலை 30) கள ஆய்வு மேற்க்கொண்டார்.உடன் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ஆர்.செந்தில்நாதன் மருத்துவமனையின் செயல்பாடுகளை விவரித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அக்கரைப்பேட்டை முதல் கும்பகோணம் வரை மீன் வியாபாரத்திற்கு பயன்படும் வகையில் மக்கள் பாதுகாப்பாக செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் வாரம் இரண்டு முறை சிறப்பு பேருந்து சேவையை நாகை மாவட்ட தி.மு.க செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன் துவக்கி வைத்தனர்.
நாகை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆகாஷ் தலைமையில் முதலாவது விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாளை(ஜூலை 31) நடைபெறுகிறது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக் கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் வரி வசூல் மையத்தில் வரிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று (ஜூலை 30) கள ஆய்வு மேற்க்கொண்டார். உடன்
நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் டி.லீனா சைமன் பங்கேற்றார்.
நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் இயங்கி வரும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரிவர காவலர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இன்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க வந்தபோது அங்கு டி.எஸ்.பி முதல் கடைநிலை காவலர்கள் கூட இல்லாததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்து திரும்பி சென்றனர்.
பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 13ஆவது தேசிய ஜூனியர் பாரா தடகள போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. தமிழக அணியில் திருக்குவளை பகுதியை சேர்ந்த எஸ்.வீரசெல்வம் குண்டு எறிதல் போட்டியில் 3ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில், போட்டியில் வென்று சாதனை படைத்த வீரர் எஸ்.வீரசெல்வத்தை நாகை ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
நாகை மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் ஜூலை 31/07/2024 க்குள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், ஏக்கருக்கு ரூ.697.15 செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்-ஐ இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின் போது முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். உடன் பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் பகுருதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் (ஜூலை 29) வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி பங்கேற்றார்.
நாகை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களாக எட்டுக்குடி முருகன் கோயில் மற்றும் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளன. இங்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் திருவாரூர், நாகை, திருத்துறைப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் எட்டுக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.