Nagapattinam

News August 1, 2024

குறுவை பயிர் காப்பீடு: கால அவகாசம் ஒரு நாள் மட்டும் நீட்டிப்பு

image

குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு தேதி நேற்றுடன் நிறைவு பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு செய்யாத நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News August 1, 2024

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் 2024-2026 ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நாளை ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 1, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

image

திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 04365-250129 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 1, 2024

நாகூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாகூர் தர்காவில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நாகூர் தர்கா குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று காலை 9.45 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

News July 31, 2024

கரம் கொடுத்த காக்கி உறவுகள்

image

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு தற்போது திருச்சி காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,17,400ஐ உதவி ஆய்வாளரின் உறவினரை நேரில் அழைத்து இன்று அளித்தார்.

News July 31, 2024

மாட்டுசந்தை அமைக்கப்படும் ஆட்சியர் உறுதி

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று ஜூலை 31) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயனடையும் வகையில் மாட்டு சந்தை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News July 31, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

நாகை மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடி முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

News July 31, 2024

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

image

வேளாங்கண்ணி ஆர்ச் அருகே உள்ள சுனாமி ஸ்தூபி அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி, சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேதாரண்யத்தில் இருந்து உப்பு ஏற்றி சென்ற லாரி ஒன்று
அவ்வழியாக வந்தபோது மூதாட்டி மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் யார், அவரது ஊர் குறித்து விசாரித்தனர்.

News July 30, 2024

ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை

image

நாகூர் சித்திக் சேவை தர்ம அறக்கட்டளை சார்பாக நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவாரூர்-திருச்சி மார்க்கமாக செல்லும் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க கோரியும் மற்றும் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மனு அளித்தனர். இதில் நிறுவன தலைவர் நாகூர் சித்திக், நாகூர் ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், இந்திய வர்த்தக தொழிற் குழுமம் துணைத் தலைவர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 30, 2024

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாகை ஆட்சியர் ஆய்வு

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகள் ஆய்வு செய்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது குறித்தும் கேட்டறிந்தார். அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் இன்று (ஜூலை 30) ஆய்வு செய்தார்.

error: Content is protected !!