Nagapattinam

News March 11, 2026

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 11, 2026

நாகை: பிரதமர் மோடி வருகை; நிர்வாகிகள் ஆலோசனை!

image

நாகை மாவட்டம் திருமருகலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில், கட்சியின் வளர்ச்சி குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் இன்று நடைபெறும் பொதுகூட்டத்திறகு வருகை தருவதை குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 11, 2026

நாகையில் வேலைவாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட “வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு வருகிற மார்.13-க்குள் 60-65 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தை தொடர்புக் கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8760191630 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

நாகை: லாரியில் அடிபட்டு காவலர் உயிரிழப்பு

image

நாகை மாவட்டம் செம்போடை கிராமத்தைச சேர்ந்தவர் காவலர் விநாயகம். இவர் வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்லும் போது எதிரே வந்த லாரியில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News March 11, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

நாகை: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

News March 10, 2026

நாகை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News March 10, 2026

நாகை: அரசு வேலை… நாளை கடைசி வாய்ப்பு!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 10, 2026

நாகை: திமுக மாநாட்டிற்கு சென்ற பஸ் விபத்து

image

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் 12-வது மாநில மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில் நாகூரில் இருந்து திருச்சி நோக்கி திமுக தொண்டர்களுடன் சென்ற தனியார் மினி பஸ் ஒன்று தஞ்சை மாவட்டம் விளார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

News March 10, 2026

நாகை: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

image

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த செம்போடை தெற்கு கடைத்தெருவில் நேற்று கடலை மூட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த மின்கம்பம் உடைந்தது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவர்ந்து வாகன கவிழ்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!