Nagapattinam

News August 11, 2024

கடற்கொள்ளையர்கள் தாக்கி மீனவர்கள் படுகாயம்

image

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த சிவசங்கர், செல்வா, ராஜகோபால், தனசேகரன் ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகையில் இருந்து மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 10, 2024

நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 32 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

நாகையில் செல்லப்பிராணிகள் கண்காட்சி; ஆட்சியர் தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசினர் தொழில் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ள 3வது புத்தக திருவிழாவில், கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் கண்காட்சி 17.08.2024 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் செல்லப்பிராணிக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

News August 10, 2024

பழமையான தேவாலயங்களை புனரமைக்க வாய்ப்பு

image

சொந்த பட்டா இடத்தில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிக்காக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தேவாலயத்தின் கட்டட ஆயுட்காலம் 10-15 ஆண்டுகள் வரை இருந்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சம், 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.15 லட்சம், 25 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் இருந்தால் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

நாகையில் சாகச நிகழ்ச்சி

image

நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐடிஐ வளாகத்தில் நடைபெற உள்ள மூன்றாவது புத்தகக் கண்காட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல் துறையினரின் பயிற்சி பெற்ற நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகள் ஆக.17 நடத்தப்பட்டு இறுதியாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த செல்ல பிராணிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஷேர் செய்யவும்.

News August 10, 2024

நாகையில் தடுப்பூசி முகாம்

image

நாகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஆக.17 அன்று செல்ல பிராணிகளுக்கான சிறப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி போடப்படாத நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை செல்லப்பிராணி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News August 10, 2024

நாகை ஏடிஎஸ்பி-க்கு பதவி உயர்வு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மகேஸ்வரி காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பதவி உயர்வு பெற்று பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்க உள்ள அவருக்கு காவல்துறை சார்பில் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News August 9, 2024

நாகை கண்காணிப்பாளர் துறை மாற்றம் செய்யப்பட்டார்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஹர்ஷ் சிங், தற்போது மத்திய உளவு பிரிவு கண்காணிப்பாளராக துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் முக்கிய துறையான மத்திய உளவு பிறிவுப்பு மாற்றம் செய்யப்பட்டதுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News August 9, 2024

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில் சேவையானது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ரயில் 27-ந்தேதி பாந்திராவிலிருந்து இரவு 9:55 மணிக்கு புறப்படுகிறது.இதே போல வேளாங்கண்ணியிலிருந்து ஆகஸ்ட்-29 மற்றும் செப்டம்பர்- 9 தேதியும் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

நாகூர் அருகே சாராயம் கடத்திய மூன்று பேர் கைது

image

நாகூர் கொட்டாரக்குடி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகம் படி நடந்து சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் கொட்டாரகுடியை சேர்ந்த கலியபெருமாள் என்பதும் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.இதை போல் ஒக்கூர் பகுதியில் சாராயம் கடத்திச் சென்ற தமிழ்மணி, காளிதாஸ் ஆகியோரையும் போலீசார் கைது அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!