India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு, மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் sdat.in/cmtrophy/player-login/ என்ற இணையதளத்தில் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் பதிவு செய்யலாம்.
நமது நாட்டின் 78வது சுதந்திர தினம் இதில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாகூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் மினராக்கள் மற்றும் முகப்பு பகுதிகளின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியை குறிக்கும் வகையில் மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. இதனை அங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ். தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்தினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், இன்று வழங்கினார்.
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர்களை நாகை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிகழக தலைவர் என்.கௌதமன் நேரில் சந்தித்து மருத்துவரிடம் அவர்களின் உடல்நிலை பற்றி விசாரித்து மீனவர்களுக்கு நிதி உதவி அளித்தார். இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் நகர மன்ற தலைவர் புகழேந்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணியில் காணாமல் போன மாணவனை தேடும்படியில் ஈடுபட்டிருந்த போது கன்னிக் கோவில் அருகே 13 வயதான வீரமலை என்ற மாணவன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார். பின்னர் இருவர் உடலையும் மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் இங்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அருகே உள்ள கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக மீனவரணி சார்பில், எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. நாகூர் சம்பா தோட்டம் சமுதாய கூடத்தை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி மறுப்பது மற்றும் அப்பகுதி மீனவர்களின் பல அடிப்படை உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், மீனவர்களுக்கு உரிய சுதந்திரம் கிடைக்க வேண்டியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை ஐடிஐ வளாகத்தில் ஆக.16 தொடங்கவுள்ள 3வது புத்தகத்திருவிழா 10 நாட்களுக்கு நாள்தோறும் காலை 11மணி முதல் மாலை வரை நடைபெறும். மாலையில் கலை நிகழ்ச்சகள், பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர்கள், இலக்கிய உரைகள் நடைபெறும். இந்த புத்தகத்திருவிழாவிற்கு வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை என ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார்.
நாகை மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜ் நேற்று மாலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனைத்து டோல்கேட்டுகள் வழியாக இலவசமாக பயணிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.