Nagapattinam

News August 16, 2024

நாகை ஆட்சியர் ஆகாஷ் அதிரடி உத்தரவு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று காலை கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சி எல்லை பகுதியில் உள்ள அரசாணி குளத்தை பார்வையிட்ட ஆட்சியர் குளத்தை சுற்றியுள்ள பகுதியில் தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். ஆய்வின் போது எம்.எல்.ஏ நாகை மாலி பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, செயல் அலுவலர் குகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 15, 2024

மின் ஊழியருக்கு ஆட்சியர் பாராட்டு

image

கீழ்வேளூர் முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மின் பிரிவு ஊழியராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். நீண்ட காலம் பணிபுரிந்து வரும் இவர் எவ்வித குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடாமல் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பரிந்துரையின் பேரில் மின் ஊழியர் செந்தில்குமாரை ஆட்சியர் ஆகாஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News August 15, 2024

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித் தொகை

image

நாகை மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் 2024-25ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறவும், பார்வையற்ற மாணவர்களின் உதவியாளர்கள் வாசிப்பாளர் உதவித் தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். இந்த மாணவர்கள் பிற துறைகளில் கல்வி உதவித் தொகை எதுவும் பெறவில்லை எனவும் சான்று பெற்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 15, 2024

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் ஒருங்கிணைந்த தஞ்சை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 வரை நடைபெறுகிறது. எனவே நாகை தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய மாநில அரசுகளின் மானியங்களை பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்த நாகை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

image

ஆழியூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நாளை(15.08.2024) காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ள கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் கலந்து கொள்ள உள்ளார். உடன் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 14, 2024

மூவண்ணக் கொடியில் மிளிரும் நாகூர் தர்கா மினாரா

image

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினாரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினாராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்து காணப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ?

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

திருநங்கைகளுக்கு இலவச பட்டா வழங்கிய ஆட்சியர்

image

திருக்கண்ணபுரம் ஊராட்சி, கோட்டூரில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் துறை சார்பில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர். பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் தவித்த எங்களுக்கு பட்டா வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

News August 14, 2024

வேதாரண்யம் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்

image

வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் சிலர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை அபகரித்து விட்டு மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News August 14, 2024

நாகை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் பணி மாறுதலில் சென்ற நிலையில், நாகை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் இன்று பொறுப்பேற்று கொண்டார். மேலும் இவருக்கு காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!