India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருப்பத்தூர், நாகை, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த மீனா மாற்றப்பட்டு, சென்னை மாநகரின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜி. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து ஆகஸ்ட் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில், இரவு புறப்பட்டு திருச்சி மயிலாடுதுறை வழியாக பனாரஸ் செல்லும் ரயில், மயிலாடுதுறை , தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, விருத்தாச்சலம் கடலூர் வழியாக செல்லும் என நேற்று தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குத்தாலம் வட்டாரத்தில் கங்காதாரபுரம், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி, மாந்தை ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி ஸ்ரீகண்டபுரம் காரனுர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லக்கூடிய ரயில் இன்று முதல் மெமு வண்டியாக மாற்றப்பட்டு இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று(அக.06) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயங்கி வந்த நிலையில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே இருக்கக்கூடிய மெமு ரயிலாக இயக்கப்பட உள்ளது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா நேற்று(ஆக.06) மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அமைச்சரிடம் வழங்கினார். பின்னர் சிறிது நேரம் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.
பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் இன்று முதல் 9 மற்றும் 11-ம் தேதிகளில் புறப்படும் காரைக்கால் விரைவு ரயில், மயிலாடுதுறை வழியாக காரைக்கால் வரை செல்லும் இந்த ரயில், விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து பெங்களுர் வரை செல்லும் பெங்களுர் விரைவு இரயில் 7 முதல் 10-ம் தேதி மற்றும் 12 தேதி வரை விருத்தாச்சலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வரை மட்டுமே செல்லும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.