India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே மீனவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்தமைக்காக மயிலாடுதுறை மக்கள் சார்பாகவும் , மீனவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எம்பி சுதா நேற்று தெரிவித்துள்ளார்.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் முத்தையா நகரை சேர்ந்தவர் அருள்முருகன் (24). இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர். அருள்முருகனுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 21 ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், சின்னமேடு, சந்திரபாடி மீனவர்கள் 37 பேரை மீட்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் படகுகளை பறிமுதல் செய்தது கண்டனத்துக்குரியது என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதற்காக பூம்புகார் பகுதி மீனவ பஞ்சாயத்தார் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துணி ரகங்களை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து துறை பணியாளர்களும் கைத்தறிக்கு கைகோர்த்து உதவிட வேண்டுமென ஆட்சியர் மகாபாரதி அப்போது கேட்டுக் கொண்டார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனை அடுத்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்களை நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விசாரணை அமைப்புகளை கூலிப்படைகளாக வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கும் பாஜக அரசுக்கு மீண்டும் சம்மட்டி அடி உச்ச நீதிமன்றம் கொடுத்து இருக்கிறது என அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் அதன் விவரங்களை பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் மாவட்ட நூலக அலுவலகம், பொது அலுவலக சாலை, வெளிப்பாளையம், நாகப்பட்டினம் 611001, எண் 9150658877 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த நூலகத்திற்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நாளை காலை 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள அதிபர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் நேற்று கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமை இருப்பதால் பரஸ்பர மரியாதையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்துக்களை COMMENTஇல் பதிவிடவும்.
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக பாலக்காட்டுக்கு தினசரி ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குறைவான ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவ சிலையின் திறப்பு விழா நாளை செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும் , விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருஉருவ சிலையை திறந்து வைத்து கொடியேற்றி சிறப்புரையாற்ற உள்ளார். இதில் திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்கும்படி இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.