India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும், குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற யார்டு பணிகள் காரணமாக ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை சுமார் 26 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்த அந்த்யோதயா அதிவிரைவு ரயில் இன்று இரவு11. 00க்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் வரை செல்லும். தாம்பரம் ரயில் நிலைய பணிகள் முடிவடைந்த காரணத்தினால் மயிலாடுதுறை வழியாக சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் இயங்கும்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் கடக்கம், முத்தூர், கிளியனூர், பெருஞ்சேரி , கொடவிளாகம் , எடக்குடி, பெரம்பூர், சேத்தூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கிராமங்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி மங்கநல்லூர் அருகே உள்ள பெரம்பூர் அம்பிகை மண்டபத்தில் நடைபெற உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை தினசரி காலை 6 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ஆகஸ்ட் 22 , 29 ஆகிய தேதிகளில் கடலூர் துறைமுகம் சந்திப்பு முதல் மயிலாடுதுறை வரை பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் இந்த ரயில் விழுப்புரத்தில் புறப்பட்டு கடலூர் துறைமுகம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெண் குழந்தைகள், விருது பெற விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் 56 பெண் குழந்தைகள் மற்றும் 50 பெண்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி மற்றும் உளவியல் பயிற்சி இன்று நடைபெற்றது. துணை காவல் ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
share now
மயிலாடுதுறை 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நாளை காலை 6.30 மணியளவில் சாய் பயிற்சி மையத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைகிறது. இப்போட்டியில் 11 வயது முதல் 21 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம் எனவும் இன்று மாலைக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.