India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்து உரிமை தாரர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சொத்துவரி கேட்பில் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(70). இவர் இன்று தனது வீட்டில் படுத்து உறங்கியபோது பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் லட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட லட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டபோது அதிலிருந்த சரடு குண்டு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றார். சீர்காழி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர
சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் மாவீரன் (9) சக்தி(9) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இன்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டை குளிச்சார் கிராமத்தில் அமைந்துள்ளது. தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தொடர்ந்து புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது மாணவர்கள் நல்ல முறையில் கல்வியை கற்க வேண்டும் எனவும். தேவையில்லாத போதை பழக்கத்தில் ஈடுபடாமல் கல்வி ஒன்றே இன்றியமையாதது என்பதை உணர்ந்து கற்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்பு பாடங்களை அன்றே உணர்ந்து கற்க வேண்டும் என தெரிவித்தார்.
புதுப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் (23) என்பவரின் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கனகராஜை கைது செய்தனர். மேலும் கனகராஜ் புதுப்பட்டினம் பழையாறு உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
சீர்காழி அருகே போக்குவரத்து எஸ்.ஐ வேல்முருகன் தலைமையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த மங்களதாசன் (35) என்பவரை போக்குவரத்து எஸ்.ஐ செந்தில் சோதனை செய்ய முயன்ற பொது அவரை தாக்கியுள்ளார். அவரை பிடிக்க முயன்ற பெண் போலீஸ் மற்றும் எஸ்.ஐ வேல்முருகனையும் மங்களதாசன் தாக்கியுள்ளார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் (23) என்பவரின் வீட்டில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கனகராஜை கைது செய்தனர் மேலும் கனகராஜ் புதுப்பட்டினம் பழையாறு உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
கொள்ளிடம் அருகே திருநீலகண்டம் புதுமண்ணியாற்றில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் படி புதுப்பட்டினம் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கூத்தியம்பேட்டை மூத்தன் தெருவை சேர்ந்த சிரஞ்சீவி என்பதும் கூலி தொழிலாளியான இவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும் நேற்று முதல் அவரை காணாமல் உறவினர்கள் தேடி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற உத்வாகநாதர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத் துறையால் 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். கோட்டாட்சியர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.