India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் வருகின்ற நவம்பர் 23-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் வரும் நவ.22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் நவ.21-ஆம் தேதி (வியாழன்) நள்ளிரவு முதல் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே மேலையூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான முத்து தேவேந்திரன் தனது இல்ல திருமண விழாவை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை வட்ட அளவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் நவம்பர் 21-ஆம் தேதி காலை 9 மணி வரை தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கச்சேரி சாலையில் உள்ள வணிக கடைகளில் மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது. தொடர்ந்து கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் , யூனியன் கிளப் ஆகியவை இணைந்து குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மழை பெய்வதால் சூலை வைக்க முடியாமலும் மழையால் வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.இதனால் மழையின் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா டிஎன்பிசி குருப் 1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து நீலகிரி மாவட்டத்தின் (Deputy collector) ஆக பணி நியமனம் பெற்றுள்ளார். குருப் 1 தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்த அதே மாவட்டத்தைச் சேர்ந்த திரு நிர்மல்குமார் நீலகிரி DSP ஆக பணிநியமன பெற்று இருவரும் ஒரே மாவட்டத்தில் பணி நியமன பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரயிலானது நாளை நவம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கரூர் வரை மட்டுமே செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் செல்பவர்கள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.