India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் அரங்கில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மாலை நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது தாயார் துர்கா ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ. வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி செம்பனார் கோயில் ஊராட்சிகளில் இன்று கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ள ஊராட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லும் ரயிலானது பராமரிப்பு பணி காரணமாக நாளை நவ.23 (சனிக்கிழமை) மற்றும் நவ.25 (திங்கட்கிழமை) ஆகிய இரு தினங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. எனவே திருச்சிக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் காலை 6:20 மணிக்கு சேலம் செல்லும் ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவ.25 (திங்கள்) முதல் நவ.28 (வியாழன்) வரை மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே ராமமூர்த்தி என்பவரிடம் பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை 8 பேர் கொண்ட குழுவினர் மிரட்டி வாங்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான மதன்ராஜை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கொள்ளிடம் அருகே அகர வட்டாரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலைக்கான பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் வைக்கப்பட்ட விளம்பர பலகையில் வடக்கு தெருவை வடக்கு தெரு எனவும் தெற்கு தெருவை எஸ்.சி தெரு என்று எழுதியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம் அதிகாரியிடம் முறையிட்டு பிறகு தெற்கு தெரு என மாற்றப்பட்டது.
மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள தருமை ஆதினத்தில் சொக்கநாதர் வழிபாடு குருவாரம் குருமூர்த்தம் வழிபாடு குருமணிகள் மணிவிழா நிகழ்வில் 365நூல் வெளியீட்டில் இன்று(21.11.2024) காலை 35ஆவது நூலாக சீகாழி தலவரலாறு திருப்பதிகங்கள் படைக்கப்பெற்றது பன்னிருதிருமுறை முற்றோதல் நடந்தது இதில் தருமை ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி குருமூர்த்தம் வழிபாடு செய்தார்.
கொள்ளிடம் அடுத்த மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தில் வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் அசோக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள உரங்கள் குறித்தும் ஆய்வு செய்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாவட்டத்தில் உர தேவை பற்றி ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்ட வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மயிலாடுதுறையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் 500க்கு மேற்பட்ட பணி வாய்ப்புகளை வழங்க உள்ளன. இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.20) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.