India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6 ஆவது சுற்று கால் மற்றும் வாய்நோய் இலவச தடுப்பூசி முகாம், 03.01.2025 முதல் 31.01.2025 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. தொடர்ந்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிகள் வரும் ஜன.1 அன்று காலை 8.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் ஜன.3 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்படும் படிவத்தை பெற்றுக்கொண்டு பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் மறைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நெருக்கடியான தருணங்களில் இந்தியாவை மீட்டவர் மன்மோகன் சிங் என்றும், வரலாறு உங்களை வலிமையானவராக நினைவு கூறும் எனவும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆண்டுகளாக இயங்கி வந்த மயிலாடுதுறை-கோயம்புத்தூர் ஜனசதாப்தி விரைவு வண்டி இன்றுடன் விடைபெறுகிறது. இந்நிலையில் நாளை (டிச.28) முதல் புதிய வடிவத்தில் LHB பெட்டிகளுடன் புதிய ரயிலாக இயக்கப்பட உள்ளது. பழைய பெட்டிகளுடன் ஒப்பிடும் போது LHB பெட்டிகளில் மூலம் பயணிகளுக்கு அதிகளவிலான வசதிகள் கிடைக்கும் என்பதால் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 5 கார்கள் & 68 டூவீலர்கள் என மொத்தம் 73 வாகனங்கள் வரும் ஜன.2-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஜன.1-இல் அதற்கான அனுமதி சீட்டுகளை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அருகே மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது லாரியை பாதி வழியில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி சவுடு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பொறையாறு போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த டிச.16 முதல் டிச.22 வரை மாவட்ட காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை நடத்திய கூட்டாய்வில் 1103 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 1.5 கிலோ கஞ்சா, 98 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை திருவிழந்தூரை சோ்ந்தவா் ஷிபானா ஜாஸ்மின்(28). இவர் திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் ஷிபானா கருவுற்ற நிலையில் ஜாகீா் உசேன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் அவரிடமிருந்து பல்வேறு தவணைகளில் 14 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பெற்ற ஜாகீர் உசேன் மீது, புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெல்லியில் நடைபெற்ற UCMAS ABACUS INTERNATIONAL CHAMPIONSHIP போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்ற பள்ளி மாணவர் சஞ்சய்ராம், ஆட்சியரிடம் இன்று வாழ்த்து பெற்றார். இதில் பள்ளி நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ், மாணவரின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.