India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் கோமல் பிரதான சாலை சேத்திரபாலபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆடு ஒன்று அடையாளம் தெரியாத வாகன மோதி இன்று சாலையில் உயிரிழந்து கிடந்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டின் உரிமையாளர்கள் ஆட்டினை எடுத்துச் சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துளசேந்திரபுரம் தைக்கால், கீழவல்லம், மேலவல்லம், சாமியம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆச்சாள்புரம் மின்சார தளத்திலிருந்து மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்த அளவு மின் அழுத்த மின் விநியோகம் செய்யப்படுவதால் வீட்டில் உள்ள டீவி, ஃபிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பெரும் பாதித்துள்ளதாகவும் அனைத்து கிராம பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் கோடையில் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் இன்று புற்று வட்டார பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டதால் ஈர காற்று வீசியது. மழை வரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் சிறப்பாக கல்வி பணியாற்றிய 19 ஆசிரியர்கள் இந்த வருடம் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானப் புகழேந்தி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்று ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுடைய பணிகளை பாராட்டி சிறப்புரை ஆற்றினர்.

மயிலாடுதுறையில் உள்ள திருமணஞ்சேரியில் அமைந்துள்ளது கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயில் குறித்து 275 தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பாடியுள்ளனர். சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் இங்கு நடைபெற்றது என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணங்கள் குறித்து பலரும் இங்கு வேண்டிச் செல்கின்றனர்.

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது.இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஆங்காங்கே நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் நுங்கு விற்பனை செய்யும் இடங்களில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் வெயிலில் தாக்கத்திலிருந்து அதிக அளவில் நுங்கு வாங்கி செல்கின்றனர். இதனால் நுங்கு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.