India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று மார்ச் 6 மற்றும் நாளை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை திருநள்ளாறு வழியாக நாகைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 11.20 மணிக்கு வருகை தரும். பின் திருநள்ளாறு காரைக்கால் வழியாக நாகைக்கு மதியம் 1.05க்கு செல்லும். மீண்டும் மதியம் 1:20க்கு நாகையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட திமுக அவைத்தலைவர் K.G. சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு, தேர்தல் குறித்தும். தேர்தல் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். உடன் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.6) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட 5ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற மாற்றுத்திறனாளிகள் தங்கள் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
2. Toll Free: 1800 4252 441
3. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

மயிலாடுதுறை தொகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு, தற்போது எஸ்.ராஜகுமார் எம்எல்ஏ-வாக இருந்து வருகிறார். ஆனால், இம்முறை மயிலாடுதுறை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல், திமுக சார்பில் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என குரல்கள் கட்சிக்குள் ஒலிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.