India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்காக 38450 எக்டர் நிர்ணயம் செய்யப்பட்டு 39,702.375 எக்டர் குறுவை சாகுபடி முடிக்கப்பட்டுள்ளது. சம்பா தாளடி 66768 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 68640 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025ம் ஆண்டிற்கு மொத்த நெல் சாகுபடி 105340 இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 108386 சாகுபடி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மக்களே, <

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் +2 அரசு பொது தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 4847 மாணவர்கள் 5662 மாணவிகள் என மொத்தம் 10,509 மாணவ, மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் 177 பேர் தேர்வு எழுத வரவில்லை. 10 பறக்கும் படைகள் 38 நிலையான படைகள் 13 வழிதட அலுவலர்கள் 41 முதன்மை கண்காணிப்பாளர்கள் 41 துறை அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AR ராஜா ஏற்ப்பாட்டில், நேற்று முஸ்டக்குடி கிராமம் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர், அதிமுக கிளை செயலாளர் பழனி உள்ளிட்ட 75க்கும் மேற்ப்பட்டோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்க்காடு மற்றும் மூவலூர் பகுதிகளில், இன்று (மார்ச்.3) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீர்காழி ஆணைக்காரன் சத்திரம் சந்தைபடுகை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (58), ஆயங்குடிபள்ளம் வெங்கடேச மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று நடைபெற்ற பிளஸ் டூ தேர்வுக்கான பறக்கும் படை அலுவலராக நியமிக்கப்பட்டு சீர்காழியில் உள்ள பள்ளியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.