India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திரபாடி ஊராட்சியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நேற்று இரவு துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்து நிலையில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குத்தாலம் அருகே காஞ்சிவாய் கிராமத்தில் இன்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டது. மேலும் சிறுத்தையின் காலடித்தடங்கள் உள்ளதால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பதற்றம் நிலவி வருகிறது.இதனிடையே மனிதர்களின் அருகாமையை சிறுத்தையானது தவிர்க்கும் என்றும் சிறு விலங்குகளை மட்டுமே வேட்டையாட கூடிய தன்மை உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வனத்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிகாலை நேரங்களில் கண்டிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் ஆகியோரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மயிலாடுதுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படையினர், காவலர்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நேற்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் யாரேனும் பொது இடங்களில் சென்றாலும் அல்லது தங்கியிருந்தாலும் 8438456100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி செம்மங்குளம் பகுதியை சுற்றி பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்றுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி செம்மங்குளம் பகுதியை சுற்றி பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்றுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் 3 நாட்களாக நகர்புற பகுதியில் ஊலா வரும் சிறுத்தையைப் பிடிக்க 3 கூண்டுகள் அமைத்தும், சிறுத்தை சிக்காததால் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது சிறுத்தையைப் பிடிக்க கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் வருகைப் புரிந்துள்ளார். மேலும் சிறுத்தை தென்பட்ட பகுதிகளில் 8 மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை, குத்தாலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேரழுந்தூர் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசலில் இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு பவுன்ராஜை ஆதரித்து அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பூம்புகார் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ் பள்ளிவாசல் ஜமாத்தார்களை ஆரத் தழுவி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு ஆதரவு திரட்டினார்.
மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது இனிமேல் ஒன்றிய பிரதமர் பெயர் மிஸ்டர் 29 பைசா என்றும், இனிமேல் நீங்கள் அவரை அப்படித்தான் கூப்பிட வேண்டும் என்றும் விமர்சித்தார். அப்போதுதான் அவர் மண்டையில் உரைக்கும் என கூறினார். தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியாக 1 ரூபாய் வழங்கும் நிலையில் அதிலிருந்து 29 பைசா மட்டுமே திருப்பி வழங்குவதை குற்றம் சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.