Mayiladuthurai

News March 23, 2024

மயிலாடுதுறை அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாபு போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுக தலைமை கழகம் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கழக அமைப்பு செயலாளர்கள் ஆசைமணி, காந்தி மாவட்ட செயலாளர்கள் பவுன்ராஜ், பாரதிமோகன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 23, 2024

மயிலாடுதுறையில் சிறப்பு கருத்தரங்கம்

image

மயிலாடுதுறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 23, 2024

மயிலாடுதுறை அருகே அதிரடி ரெய்டு 

image

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செல்வராஜ் தலைமையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த கனிவண்ணன் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 , 04364 -211722 என்ற எண்ணிலும், திருவிடைமருதுார் தொகுதிக்கு 0435-240187, கும்பகோணம் தொகுதிக்கு 0435-2430101 , பாபநாசம் 0437-4222456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

மயிலாடுதுறை தேர்தல் அலுவலர் தகவல்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

மயிலாடுதுறையில் ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக அஜித்குமார் என்கின்ற இளைஞரை 7 பேர் கொண்ட குழுவினர் கொலை செய்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு இடர்பாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பட்டமங்களம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா என ஆட்சியர் மகாபாரதி இன்று ஆய்வு செய்தார்.

News March 22, 2024

தேர்தல்: பாமக வேட்பாளர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க .ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2024

அதிமுக வேட்பாளருக்கு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பாபுவை அவரது இல்லத்தில் நேற்று மாலையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் மேலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 21, 2024

மயிலாடுதுறை கொலை வழக்கில் மேலும் 2 குற்றவாளிகள் கைது

image

மயிலாடுதுறையில் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித் குமார் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 5 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து மோகன்தாஸ் மற்றும் சத்யநாதன் ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 21, 2024

மயிலாடுதுறையில் கொலை குற்றவாளிகள் 5 பேர் கைது

image

மயிலாடுதுறையில் அஜித்குமார் என்கின்ற இளைஞர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் சந்திரமோகன் (29) , சதீஷ் (26), பாலாஜி(29), ஸ்ரீராம் (27). சந்திரமௌலி ஆகிய ஐந்து நபரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!