Mayiladuthurai

News March 30, 2024

மயிலாடுதுறை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி, ரங்கோலி கோலம் இடுதல், வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இத்தேர்தலில் வாக்காளர்கள் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணியிலிருந்து மருத்துவ சிகிச்சை காரணமாக விலக்கு கோரி மனு வழங்கியவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

மயிலாடுதுறை: ஆதீன மடத்திடம் பழமை வாய்ந்த பள்ளி வழங்கல்

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளின் சார்பில் சண்முக சுந்தர் ராஜா பள்ளியின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான ஆவணத்தை தருமபுரம் ஆதீனத்திடம் இன்று வழங்கினார்.

News March 30, 2024

மயிலாடுதுறை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சீர்காழி அருகே திருமுல்லைவாசலை சேர்ந்த கவின்,ஜஸ்வந்த்,காளிதாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை ராதாநல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவின்,ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காளிதாஸை பொதுமக்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News March 30, 2024

அதிமுகவில் 20 நபர்கள் ஐக்கியம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News March 29, 2024

மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்திய நபருக்கு  வலைவீச்சு

image

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் லீலாவதி பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News March 29, 2024

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து

image

மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு தற்பொழுது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கூட்டணி கட்சிகளான திமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 29, 2024

மயிலாடுதுறை: நிர்வாகிக்கு வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வழுவூர் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் வி ஜி கே மணி இல்லத்தில் நேற்று மாவீரன் வன்னியர் சங்க கலை இலக்கிய அணி மாவட்ட நிர்வாகி கடலி கார்த்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் வி ஜி கே மணி கலந்து கொண்டு நிர்வாகிக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்.

News March 28, 2024

மயிலாடுதுறையில் பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 30 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் – சுதா , அதிமுக – பாபு , பாமக – ம.க. ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சி காளியம்மாள் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

News March 28, 2024

மயிலாடுதுறை:வேட்பு மனு தாக்கலில் கலந்து அரசியல் பிரமுகர்கள்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி பாமக நகர தலைவர் கார்த்தி, முன்னாள் நகர தலைவர் குமார் உள்ளிட்ட சீர்காழி பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்

error: Content is protected !!