India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் காழியப்பநல்லூர் சிங்காநோடை தில்லையாடி அனந்தமங்கலம் மாமா குடி கிடங்கள் காலகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலின் தாக்கத்தினால் மா சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது இலைகள் உதிர்ந்து செடி பாதிப்பு.
தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை தோறும் வார காய்கறி சந்தை நடைபெறுகிறது.நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளையும் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்தனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
மயிலாடுதுறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஏவிசி கல்லூரியில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் மற்றும் கணினி பதிவு செய்யும் காவலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்மணிக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இதனை அறிந்த நீடூர் தமுமுக நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து பெண்ணுக்கு இன்று இரத்தம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்கி மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ்பர்க் கோட்டை உள்ளது. தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மே, ஜூன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஓசோன் ஆற்று வீசும். மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு 1306 ஆம் ஆண்டு மாசில்லாமணி நாதர் கோவில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது. இந்த கடற்கரைக்கு மக்கள் வருகை அதிகமாகி வருகிறது.
மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே மற்றும் காந்திஜி சாலையில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் இன்று நடைபெற்றது. தொடர்ந்து இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று திருச்சி கோட்ட மேலாளரை நேரில் சந்தித்தனர். அப்போது, மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ரயிலை மயிலாடுதுறையில் உள்ள பயணிகளும் பயன்படுத்துவதற்கு வசதியாக ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் இந்திரா நகரில் மோட்டார் டேங்க் பழுதடைந்ததால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஊழியர்களைக் கொண்டு மோட்டார் டேங்க் இன்று பழுது நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.