India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழியில் மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் முயற்சியாக ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் “வெற்றி பெற பேசு” எனும் தலைப்பில் ஒரு நாள் மேடை பயிற்சி முகாம் மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சீர்காழி பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முன்பதிவு செய்து பங்கேற்று தங்களது மேடை பேச்சு திறனை வளர்த்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாம்புள்ளி கிராமத்தில் நாக முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா இன்று நடைபெற்றது. கங்கணம் கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்கள் வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன் செல்ல காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மயிலாடுதுறை, சேண்டிருப்பு கிராமத்தில் புகழ்வாய்ந்த சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவிரி கரையில் இருந்து சுமார் 10,000 பால்குடங்கள், அலகு காவடி, கூண்டு காவடிகளை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று காலை 10:30 – 11:00 க்குல் தரங்கம்பாடி- காரைக்கால் செல்லும் சாலையில் தெரசா கல்லூரி முன்பாக ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே பலி. பலியான மூவரும் யார் என்பது தெரியவில்லை. இதனைக் குறித்து பொறையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற மே நான்காம் தேதி வரை 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வீசக்கூடும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நெடுந்தூர பயணங்களை தவிர்த்து காலை 11மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டிலேயே இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுகா சாத்தங்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தரங்கம்பாடி பேரூராட்சியில் 9ஆவது வார்டு உறுப்பினர் ஜோன்ஸ் செல்லப்பா தனது தாயின் 16 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி காப்பகத்திற்கு நேரில் சென்று இன்று மதியம் உணவு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரடி பகுதியில் இன்று கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில் ஒருவருக்கு தலையில் படுகாயமும் மற்றவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.
சீர்காழி பகுதியில் சமூகநல செவிலியராக பணியாற்றிய தையல்நாயகி என்பவரின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று சீர்காழியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது பணியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.