India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை ஆரோக்கிநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 5ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை வைத்து பிடிப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 5 வனத்துறை அலுவலர்கள் மற்றும் வால்பாறையில் இருந்து 5 வனத்துறை அலுவலர்கள் வருகை தர உள்ளனர். எனவே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை ரயிலடி தெருவில் உள்ள விஜய் பள்ளி மற்றும் கூறைநாடு பகுதியில் உள்ள தொல்காப்பியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அறுபத்துமூவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, செவன்த் டே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அழகு ஜோதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பால சரஸ்வதி பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சி தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள் செல்லையா இவரது வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்கசிவினால் கூரை வீடு தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 500க்கும் மேற்பட்ட மக்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. அவற்றை நிறைவேற்றி தரக்கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை நகரத்திற்குட்பட்ட கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி செயலாளர் நான்கில் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.