Mayiladuthurai

News May 30, 2024

மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு பொய்யான திட்டங்களை அறிவித்து நம்பிக்கை ஏற்படுத்தி ஏமாற்றி மோசடி செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற்றுவது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்வது என பொதுமக்களை மோசடியில் ஈடுபடும் நபர்களிடமிருந்து விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்.

News May 30, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தேவையான நடவடிக்கைகள் கடன் உதவிகள் போன்றவை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 29, 2024

திருநங்கைகளின் வாழ்வாதாரம் தொடர்பாக ஆலோசனை

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 29, 2024

மயிலாடுதுறை: தொழிற்பயிற்சி சேருவதற்கு விண்ணப்பங்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டு சேர்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இணைய வழி குற்றம் பற்றி புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி அல்லது இலவச தொலைபேசி எண் 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் இணைய வழி குற்றப் பிரிவு (Cyber Crime) 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்க மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News May 29, 2024

மயிலாடுதுறை: தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை

image

மயிலாடுதுறை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நடத்திய மகளிர் கோடைகால பயிற்சி திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில செயலாளர் தைக்கால் I. முபாரக் பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார் மயிலாடுதுறை TMMP மாவட்ட பொருளாளர் M.நபுராபானு (முபல்லிகா) ,கொள்ளிடம் ஒன்றியம் மோசினா (முபல்லிகா) உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

News May 29, 2024

பனை நொங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் காழியப்ப நல்லூர் காட்டுச்சேரி பொறையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலை ஓரங்களில் பனை நொங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. சில நாட்கள் மழை பெய்ததன் காரணமாக நொங்கு விற்பனை பாதிக்கப்பட்டது. மீண்டும் தற்பொழுது வெயில் காட்டத் தொடங்கியுள்ளதால் நேற்று பனை நொங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

News May 28, 2024

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்பி மீனா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

News May 28, 2024

இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது

image

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் அருகே வீனஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்தார். இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் இளைய பாரத் மற்றும் கபிலன் ஆகிய இருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

News May 27, 2024

மயிலாடுதுறையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

image

மயிலாடுதுறை திருமஞ்சன வீதி பாலம் நகராட்சியின் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பாலம் தற்போது சேதம் அடைந்து ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!