India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே இந்த நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்றார். அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றினார். இதில் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 70.06% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் சுதா, அதிமுக சார்பில் பாபு, பாமக சார்பில் ஸ்டாலின், நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2019இல் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமலிங்கம் 23.91% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆசைமணி 261,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சுதாவும், அதிமுக சார்பில் பாபுவும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள தனியார் பிரியாணி கடையில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் முதல் குற்றவாளியான கடை நிர்வாகி அஃபில் (37). நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அமர் உள்ளிட்ட சிலரை மயிலாடுதுறை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் காணொளி காட்சி வாயிலாக தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும் , பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
ரயில் நிலையத்தில் உள்ள
இருசக்ககர வாகன காப்பகம் ஜூன்-1 முதல் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தி வைத்துள்ளவர்கள் அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தங்கள் வண்டியை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியதில் நேற்று மாவட்டத்தில் கிராம பகுதிகளில் மழை நீர்,கழிவு நீர் வடிகால்கள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மே 31ஆம் தேதி முதல் ஜூன் ஒன்பதாம் தேதி வரை வடிகால்கள் தூர் வாருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் , தூய்மைப்படுத்துதல் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.